Asianet News TamilAsianet News Tamil

தோனியின் சுயரூபம் தெரியாம ஒரு கூட்டம் சிலிர்த்துப்போயி சில்லறையை தூக்கி வீசுது

தோனி ஓய்வு பெறக்கூடாது என்று வலியுறுத்தி தோனியின் மீதான விசுவாசத்தை சில ரசிகர்கள் வெளிப்படுத்திவரும் நிலையில், தோனியின் உண்மை சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர். 

dhoni playing for his own beneficiery
Author
India, First Published Jul 19, 2019, 1:53 PM IST

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி இன்னும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது. 

தோனி ஓய்வு குறித்து எதுவும் பேசாத நிலையில், தோனியை அணியில் எடுப்பது குறித்து சிந்தக்கவில்லை. எனவே தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது. இல்லையெனில் அவரை ஓரங்கட்ட வேண்டிவரும் என்கிற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

dhoni playing for his own beneficiery

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்த தகவல் வெளியானது. இந்திய அணிக்கு இனிமேல் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர். தோனி 15 பேர் கொண்ட அணியில் வேண்டுமானால் இருப்பார். ஆனால் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பேயில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளிவந்தது. 

இதன்மூலம் தோனி அவரது ஓய்வு முடிவை அவரே அறிவிக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ நெருக்கடி கொடுப்பது தெரிகிறது. ஆனால் தோனி இதற்கெல்லாம் மசியவேயில்லை. தோனியின் ஓய்வு குறித்த விவாதம் வலுத்துள்ள நிலையில், இதுகுறித்த விவாதம் ஒன்றில் சேவாக், கம்பீர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

dhoni playing for his own beneficiery

அப்போது, தோனியின் ஓய்வு குறித்து மிகவும் வெளிப்படையாகவும் வழக்கம்போல தனது நேர்மையான கருத்துகளை அதிரடியாகவும் தெரிவித்தார் கம்பீர். இதுகுறித்து பேசிய கம்பீர், இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அடுத்த உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக புதிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை தயார் செய்ய வேண்டும். 

அணியின் எதிர்கால நலன் கருதி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முடிவெடுக்க வேண்டும். தோனி கண்டிப்பாக 2021-2022 வரை ஓய்வு பெறமாட்டார். ஏனெனில் அவரது வணிக ஒப்பந்தங்கள் பல 2022ம் ஆண்டுவரை இருக்கலாம். அதனால் அதுவரை அவர் அணியில் ஆடவே செய்வார். அவராக ஓய்வு அறிவிப்பதெல்லாம் நடக்காத காரியம். அவரை உட்கார வேண்டுமானால் வைக்கலாம். அவர் ஓய்வு அறிவித்தால் அது அவரது வணிக நலன்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அவர் கண்டிப்பாக ஓய்வு பெறமாட்டார். எனவே புதிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார். 

dhoni playing for his own beneficiery

இனிமேல் தோனியிடமிருந்து ஒரு வீரராக இந்திய அணிக்கு எதுவும் தேவையில்லை என்பதை அவரே உணர்ந்தும் கூட இன்னும் ஆடுவதற்கு ஒரே காரணம் சுயநலம் தான். தோனி சுயநலத்திற்காக ஆடிவருகிறார் என்பது தெரியாமல் தலைவா ஓய்வுபெற்றுவிடாதே என்று சிலிர்த்துப்போய் சில்லரையை விட்டு வீசும் ஒரு பெருங்கூட்டம் உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios