#ICCWTC ஃபைனல்: கோலியோ ரோஹித்தோ இல்ல.. இந்திய அணியின் மதிப்புமிகு வீரர் அவருதான்..! கனேரியா அதிரடி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியின் மதிப்புமிகு வீரராக ஜொலிக்கப்போவது ரவீந்திர ஜடேஜா தான் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்தியா மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஆகிய அணிகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ள நிலையில், ஃபைனலில் இந்திய அணியில் யார் மதிப்புமிகு வீரராக ஜொலிப்பார் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையே இந்திய அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்திருக்கும் நிலையில், அவர்களையெல்லாம் விட முக்கியமான வீரர் ஜடேஜா தான் என்று கனேரியா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, கிரிக்கெட்டில் எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் சரி, பவுலர்களின் ரோல் முக்கியமானது. பவுலர்கள் நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தால் அந்த அணி வெற்றி பெறும். அந்தவகையில், இந்திய அணியை பொறுத்தமட்டில் ஜடேஜா முக்கியமான வீரர். ஜடேஜா 3டி பிளேயர். முக்கியமான நேரங்களில் எல்லாம் பவுலிங்கில் விக்கெட் வீழ்த்தி கொடுப்பார். பின்வரிசையில் முக்கியமான ரன்களை அடித்து கொடுப்பார். ஃபீல்டிங்கில் ஆச்சரியங்களை நிகழ்த்துவார். எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஜடேஜா தான் இந்தியாவின் மதிப்புமிகு வீரர் என்று கனேரியா தெரிவித்துள்ளார்.