Asianet News TamilAsianet News Tamil

கோலி என்ன வேணா சொல்லிட்டு போகட்டும்.. எங்களுக்கு என்ன வந்துச்சு.. செம கெத்து காட்டும் கெய்க்வாட்

கடந்த முறையை போல இந்த முறை பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் கோலியின் கருத்து கேட்கப்படமாட்டாது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, இதுவரை என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. என்னுடைய ஆதரவு சாஸ்திரிக்குத்தான். சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று கோலி தெரிவித்திருந்தார். 
 

cac member gaikwad opinion about head coach selection
Author
India, First Published Jul 31, 2019, 5:53 PM IST

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிவடைகிறது. 

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. இதையடுத்து ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. 

ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கும் ராபின் சிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்துள்ளனர். கபில் தேவ், கெயிக்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய குழு, ஆகஸ்ட் மாத மத்தியில் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தவுள்ளது.

cac member gaikwad opinion about head coach selection

கடந்த முறையை போல இந்த முறை பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் கோலியின் கருத்து கேட்கப்படமாட்டாது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, இதுவரை என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. என்னுடைய ஆதரவு சாஸ்திரிக்குத்தான். சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று கோலி தெரிவித்திருந்தார். 

cac member gaikwad opinion about head coach selection

கோலி பேசியது குறித்து தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட்டிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள கெய்க்வாட், கேப்டன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு கமிட்டி. தலைமை பயிற்சியாளரை எதனடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று சில வரையறைகள் உள்ளன. அதனடிப்படையில் நாங்கள் தேர்வு செய்வோம். இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் விண்ணப்பித்துள்ளனர். நேர்காணல் நடத்தி தகுதியானவரை தேர்வு செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios