பவுலிங் முனையில் நிற்கும் வீரர், பவுலர் பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகர்ந்து பவுலர் ரன் அவுட் செய்தால், அது ரன் அவுட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எம்சிசி விதிமாற்றம் செய்தது குறித்து பிரயன் லாரா கருத்து கூறியுள்ளார்.
மன்கட் ரன் அவுட்:
பவுலிங் முனையில் நிற்கும் வீரர், பவுலர் பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகர்ந்தால் பவுலர் ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் செய்வதே மன்கட் ரன் அவுட்.
மன்கட் ரன் அவுட் செய்யலாம் என்றாலும், அது ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்பதால், வீரர்கள் யாரும் அதை செய்ய தயங்குவார்கள். பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகரும் பேட்ஸ்மேனை எச்சரித்து மட்டுமே செல்வார்கள் பவுலர்கள்.
அஷ்வின் மன்கட் ரன் அவுட்:
ஆனால் 2019 ஐபிஎல்லில், அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிய ரவிச்சந்திரன் அஷ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் ரன் அவுட் செய்தார். அது விதிகளுக்குட்பட்டதுதான் என்று அஷ்வினுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்தாலும், பல முன்னாள் வீரர்கள் அஷ்வின் செயலை ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என விமர்சித்தனர்.
ஆனால் அஷ்வினோ தான் விதிகளை மீறி எதுவும் செய்யவில்லை என்றும், தான் செய்தது சரிதான் என்பதில் உறுதியாகவும் இருந்தார்.
எம்சிசி விதிமாற்றம்:
இந்நிலையில், பந்துவீசும் முன்பாக க்ரீஸை விட்டு பவுலிங் முனையில் நிற்கும் வீரர் நகர்ந்து, பவுலர் அவரை ரன் அவுட் செய்தால் அது ரன் அவுட் தான் என்று எம்சிசி விதிமாற்றம் செய்தது.
பிரயன் லாரா கருத்து:
இந்த விதிமாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரும், சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளருமான பிரயன் லாரா, இது ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்பதுதான் இப்போதும் என்னுடைய கருத்து என்றார் லாரா.
