Asianet News TamilAsianet News Tamil

ரவிச்சந்திரன் அஷ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா..!

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரும் டெல்லி கேபிடள்ஸ் வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

10 members of ravichandran ashwin family have tested corona positive
Author
Chennai, First Published May 1, 2021, 12:25 PM IST

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் நடந்துவருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் ஆடிய ரவிச்சந்திரன் அஷ்வின், கடந்த வாரம் அந்த அணி சென்னையில் ஆடிய ஒரு போட்டியுடன், இந்த சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அஷ்வின்.

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் தன் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக தெரிவித்து விலகினார் அஷ்வின்.

10 members of ravichandran ashwin family have tested corona positive

இந்நிலையில், அஷ்வினின் மனைவி ப்ரீத்தி பதிவிட்டுள்ள டுவீட்டில், குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதையும் உறுதி செய்த ப்ரீத்தி, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios