Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் யந்திர தகடுகள் வைத்து வழிபட்டால், அது நம் வீட்டை கவசமாக காக்கும்.. இந்த 1 பொருளை தூக்கி போடுங்க..!

வீடுகளில் யந்திர தகடுகளை வைத்து வழிபடுவதற்கான காரணங்கள், அதன் பலன்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். 

yantra plate worship at home in tamil
Author
First Published Mar 27, 2023, 4:09 PM IST

நிறைய வீடுகளில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு மத்தியில் யந்திர தகடுகளையும் வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த யந்திர தகடுகளில் ஸ்ரீ ராமர் ஜாதகம், சக்கரங்கள், மந்திரங்கள் போன்றவை பொறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான மக்கள் ஸ்ரீ சக்கரத்தையே வழிபடுகிறார்கள். இதற்கு அறிவியல் மற்றும் ஆன்மீகரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. 

தாந்தரீகம் 

மனித உடலையே கருவியாக வைத்து செய்யும் வழிபாடு தான் தாந்தரீகம் (thanthrigam). எல்லாவற்றிற்கும் ஆதரமான சக்தியை உடலில் அதிகரிக்க வைத்து அதை பிரபஞ்ச ஆற்றலுடன் இணைக்கும் இந்த தாந்தரீக வழிபாட்டால், இறை ஞானம் கிடைக்கும். உலக வெற்றிகளையும் அடையலாம். இதனுடைய ஒரு பகுதிதான் யந்திர வழிபாடு. யந்திரம், மந்திரம், தந்திரம் என்ற மூன்றும் ஒன்றாக இணையும்போது, பிராண சக்தி அதிகரிக்கும். 

ஸ்ரீ சக்கர யந்திரம் 

யந்திரங்களிலே ஸ்ரீ சக்கர யந்திரம் தான் உயர்வாக சொல்லப்படுகிறது. இதைக் கொண்டு வழிபட்டால் கோவம், அளவு மீறிய பேராசை, பொறாமை ஆகிய கெட்ட குணங்கள் நம்மை விட்டு அகன்றுவிடும். வெறுமனே ஒரு யந்திரத்தை வாங்கி வீட்டில் வைப்பதால் ஒரு பலனும் இல்லை. இதற்கான மந்திரங்களை சொல்ல வேண்டும். யந்திரங்களுக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்கும்போது யந்திரத்தில் இருக்கும் ஒளியானது, நாம் சொன்ன மந்திரங்களின் ஒலிகளை ஈர்த்து கொள்ளும். 

செம்பு நன்மைகள் (copper benefits in tamil)

யந்திரங்கள் பொதுவாக செப்பு தகடுகளால் தான் உருவாக்கப்படும். ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை குறிக்கும் உலோகம் தான், செம்பு. இதில் நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி எதையும் ஈர்க்கும் தன்மை உள்ளது. நேர்மறை சக்தியை கொண்டிருக்கும் செம்பு தகட்டில் எதிர்மறை சக்தி நெருங்கவே முடியாது. கெட்ட சக்திகள் என்றில்லை, கிருமிகளும் செம்புக்கு அருகில் வராது. அதனால் தான் பூஜை அறையில் தீர்த்தங்களை செம்பு பாத்திரங்களில் வைக்கிறார்கள். காசி, ராமேஸ்வரம் என எங்கிருந்து கொண்டு வரும் தீர்த்தமாக இருந்தாலும் செம்பு பாத்திரத்தில் ஊற்றி, பூஜை அறையில் வைத்தால் அதில் நுண்ணுயிர் கிருமிகள் ஏதும் வராது. தீர்த்தங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். 

இதையும் படிங்க: உங்க உள்ளங்கையில் இப்படி 1 ரேகை இருக்கா? இது தான் அதிர்ஷ்ட ரேகை... லட்சத்தில் ஒருத்தருக்கு தான் இருக்கும்..!

யந்திர தகடு 

யாகங்களில் யந்திர தகடுகளை வைத்து பூஜை செய்யப்பட்ட பிறகு வீட்டில் வைக்கலாம். யந்திர தகடுகளை நம் வீட்டில் வைத்து பூஜை செய்தாலும், யாகங்களின் போது சொல்லப்பட்ட மந்திரங்களின் சக்தியானது யந்திர தகட்டில் இருக்கும். இதனை வீட்டின் பூஜை அறையில் தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபட்டால் நேர்மறை ஆற்றல் அல்லது தெய்வீக சக்தி நம்முடைய வீட்டில் எப்போதும் இருக்கும். வீட்டில் தினமும் மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருந்தால், யந்திர தகட்டின் ஆற்றலானது பல மடங்கு பெருகிவிடும். அந்த சக்தி நம் வீட்டிற்கு பாதுகாப்பு கவசம் மாதிரி இருக்கும். இதனால் கெட்டது நம் வீட்டை நெருங்காமல் இருக்கும். யந்திர தகடு வீட்டின் பாதுகாப்பு அரண். 

யந்திரம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியது: 

ஏதோ கடைகளில் வாங்கி வீட்டில் வைக்கும் யந்திர தகடு நமக்கு கெட்டதை கூட செய்யலாம். ஏனென்றால் இந்த தகடு நாம் பேசுவதை கூட ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. சாதாரணமாக யாகம் செய்யாமல் கடைகளில் வாங்கும் யந்திரங்கள் கெட்டதை செய்யலாம். அதை வீட்டில் வைக்க வேண்டாம். முறையான பூஜைகள்/ யாகங்களில் வைத்த யந்திரங்களை வீட்டில் வைத்து பூஜை செய்வது தான் பலன் தரும்.  

இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை தான்.! ஏப்ரல் மாதம் வந்தால் டாப் லெவலுக்கு போய்டுவாங்க.!

Follow Us:
Download App:
  • android
  • ios