Asianet News TamilAsianet News Tamil

செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பௌமாஸ்வினி புண்யகாலம்!

சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும். அந்த வகையில் ஒரு சிறப்பு தினம் தான் பௌமாஸ்வினி.
 

what is poumasini and how to Worship
Author
First Published Sep 12, 2022, 10:32 AM IST

பௌமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய் கிரகத்துக்கு பெயர். செவ்வாய் கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பௌமாஸ்வினி புண்யகாலம் எனப்படுகிறது. இது அம்பாளின் வழிபாட்டுக்கு அருமையான நாள் ஆகும்.

எப்போது வருகிறது

வருடத்துக்கு சில நாட்களே இது வரும் என்பதால், முன்கூட்டியே இதை குறித்துக்கொண்டு பௌமாஸ்வினி அன்று கோயிலில் அர்ச்சனை, அபிஷேகம், வீட்டில் ஹோமம் போன்றவைகளை செய்யும்போது, இறைவியுனுடைய கடாட்சம் உங்களுக்கு கிடைக்கும். மிகவும் அரிதான இந்த நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான நன்மையைத் தரும்.

இந்த ஆண்டு எப்போது வருகிறது

இந்த ஆண்டு ஆவணி மாதம் 28ஆம் தேதி (13-9-22), புரட்டாசி மாதம் 24ஆம் தேதி (11-10-22) ஆகிய இரு நாள்கள் பௌமாஸ்வினி புண்ணியகாலமாக வருகின்றன.

பெளமாஸ்வினி வழிபாடு எப்படி

ஈசான்ய மூலையில் பலகையில் கோலமிட்டு, அதன் மேல்தீபம் ஏற்றி, ஒன்பது முறை துர்கா சப்த ச்லோகி பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாராயணம் முடியும்போது, ஒரு ப்ரதக்ஷிண நமஸ்காரம், இப்படியாக ஒன்பதுமுறை செய்ய வேண்டும்.

வழிபாட்டின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்த தோஷ நிவர்த்திக்கான, வழிபாட்டுக்குரிய நாளாக இந்த நாளைக் கருதுகின்றனர். எத்தனை முயன்றாலும் தனக்குரிய ஒரு நிலத்தையோ வீட்டையோ கட்ட முடியாதவர்கள் இந்த விரதம் இருப்பதன் மூலமாக விரைவில் நிலம் வாங்கி வீடு கட்டலாம்.

செவ்வாய், இரத்தத்தைக் குறிக்கின்றவர் என்பதால் இரத்தக் குறைபாடு நோய் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து நோயிலிருந்து விடுதலை பெறலாம். இந்த நாள், ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு உரிய நாள். ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக லக்ஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும்.

தோஷங்களை நிவர்த்தி செய்யும் அத்ரி மலை..

அஸ்வினி நட்சத்திரம் என்பது மேஷ ராசியில் உள்ள நட்சத்திரம். அந்த மேஷ ராசி, செவ்வாயின் ஆட்சிவீடு. இப்படிப்பட்ட நாளில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செவ்வாய் தோஷங்கள் விலகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனலாபமும், பூமிலாபமும் ஏற்படும். சகோதர ஒற்றுமை ஒங்கும். மனோபலம் கூடும். சத்ரு பயம் நீங்கும். இந்த நாளில் அம்பிகை வழிபாடும் அளப்பரிய நன்மைகளை தரும்.

அன்னையிடம் கேட்க ஆயிரம் விஷயங்கள் இருக்குமே எதை கேட்பது எதை விடுவது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அன்னையை சரணடைந்தாலே உங்களுக்கு வேண்டியது எதுவோ அதை அவளே கொடுப்பாள். உங்களுக்கு என்ன தேவை என்பது அவளுக்கு தெரியுமே.

அன்னையை வழிபட மந்திரம் ஸ்தோத்திரம் தெரிய வேண்டியதில்லை. பூஜையும் தியானமும் கூட தேவையில்லை. அன்னை பார்த்துகொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும். உங்கள் கோரிக்கை நிறைவேறும்.

Follow Us:
Download App:
  • android
  • ios