Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் புறா கூடு கட்டுவது சுபமா அல்லது அசுபமா..? வாஸ்து சொல்வது என்ன..?

புறா வீட்டில் கூடு கட்டினால் அது சுபமா அல்லது அசுபமா. வாஸ்து என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

vastu tips pigeon nest in house is auspicious or inauspicious in tamil mks
Author
First Published Jun 22, 2024, 10:03 AM IST

இந்து மதம் மற்றும் வாசு சாஸ்திரங்களில் பல விஷயங்கள் மங்களகரமான அல்லது அசுபமாக கருதப்படுகின்றன. இந்த மரபுகள் பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் நடந்து வருகின்றன. விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான சில ஒத்த நம்பிக்கைகள் உள்ளன. இவற்றில் புறாவும் ஒன்று.

மகிழ்ச்சி மற்றும் அமைதியின் அடையாளமாக கருதப்படும் புறா குறித்த இந்த இரண்டு கருத்துக்கள் மக்கள் மனதில் உள்ளன. வாஸ்து படி, புறா லட்சுமி தேவியின் பக்தனாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அது வீட்டிற்கு வருவது மங்களகரமானது. அதே நேரத்தில் அது வீட்டில் தங்குவது துரதிஷ்டத்தை அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். புறா தொடர்பான சில விஷயங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் புறா கூடு:
வீட்டில் புறா கூடு இருப்பது அசுபமானது என்று பொதுவாக நம்பப்படுகிறது. வீட்டின் பால்கனியிலோ அல்லது கூரையிலோ புறா கூடு கட்டுவது என்பது துரதிஷ்டத்தை கொண்டு வரும் என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில், அது உடனடியாக அகற்றப்பட வேண்டும். இல்லையெனில், அந்த வீட்டில் உள்ள நபர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் நிதி நெருக்கடியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.

இதையும் படிங்க:  Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!

மகிழ்ச்சியும் செழுமையும் அழிந்துவிடும்:
உங்கள் வீட்டில் புறா கூடு கட்டி இருந்தால் மகிழ்ச்சியும் செழுமையும் அழிந்துவிடும். அத்தகைய சூழ்நிலையில் அது அகற்றுவது நல்லது. ஆனால்,  புறா கூடு பல இடங்களில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. காரணம், புறா செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் பக்தன் என்பதால் லட்சுமி தேவி மகத்தான ஆசீர்வாதங்களை பொழிகிறார். புறாக்ககள் வந்து செல்லும் வீட்டில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

கூட்டை என்னை செய்வது?:
புறாவின் கூடை நீங்கள் அசுபமாக கண்டால், உடனடியாக அதை வீட்டில் இருந்து அகற்றிவிடுங்கள். நீங்கள் அதை நல்லதாக கருதினால் அதை அகற்ற வேண்டாம். ஆனால், நாம் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி பேசினால் புறாவின் கூட்டை வீட்டில் இருந்த அகற்றுவது நல்லது என்று கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  பூஜை அறையில் மறந்தும் கூட இந்த சிலைகளை வைக்காதீர்கள்... ஏன் தெரியுமா..?

புறா தொடர்பான சில வாஸ்து குறிப்புகள்:

புதன் மற்றும் வியாழ நிலை வலுவாக இருக்கும்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, லட்சுமி தேவியின் ஆசியைப் பெற புறாவுக்கு தானியங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜாதகத்தில் வியாழன் மற்றும் புதன் நிலையை வலுப்பெறும். இதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

திடீரென்று புறாவை காண்பது: வாஸ்து படி, வெளியில் செல்லும்போது திடீரென்று உங்கள் வலது பக்கத்தில் இருந்து புறா பறந்தால் அது உங்கள் சகோதரனுக்கும் குடும்பத்திற்கும் நல்லதல்ல.

தலைக்கு மேல் புறா பறந்தால்: வாஸ்துபடி, ஒரு புறா உங்கள் தலைக்கு மேல் பறந்தால் விரைவில் வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என்பது புரிந்து கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios