Asianet News TamilAsianet News Tamil

மாடா உழைத்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியலையா? கேதுவும் சந்திரனும் செய்யும் குழப்பம், எப்படி சமாளிக்கணும்!

வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள், வழிபாடுகள் குறித்த முழுவிவரம். 

 

spiritual remedies for dreams come true
Author
First Published Feb 8, 2023, 6:04 PM IST

பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் வெற்றி வசப்படுவதில்லை. கேது அவர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கிறார். செயல் வடிவம் பெறாமல் வெறுமனே கனவு காண்பது வீண். ஒருவர் கடினமாக உழைத்து தனது எண்ணங்களை செயலாக மாற்ற வேண்டும். நம்மை அவமானப்படுத்தியவர்களுக்கு முன்னால் சாதித்து காட்ட வேண்டும். கல்வியில் பெரிய அளவில் தேர்ச்சி பெற வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், மருத்துவராக வேண்டும், பெரிய வீடு கட்ட வேண்டும் உள்ளிட்ட பல ஆசைகளும் கனவும் எல்லோருக்கும் இருக்கும். 

ஆனால் எல்லா கனவுகளும் நனவாகாது. சிலருக்கு உடனடி பலன் கிடைக்கும். சிலர் கடினமாக முயன்றாலும் எந்த பலனும் கிடைக்காது. இருப்பினும், இலக்கை அடைய எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு கடின உழைப்பும், கூடவே அதிர்ஷ்டமும் சேர்ந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் முக்கியமாக உங்களுடைய கிரக பலத்தை அதிகரிப்பது அவசியம். கனவுகளை அடைய உதவும் ஜோதிட குறிப்புகளை இங்கு காணலாம். 

கனவுகள் பலிக்க பரிகாரம்

  • இலக்குகளை அடைய உங்கள் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற வேண்டும். சூரிய கிரகத்தை வலுவாக்க செப்பு வளையல் அணிந்து கொள்ளுங்கள். இந்த செப்பு வளையலை தந்தை அல்லது தந்தை ஸ்தானத்தை கொண்ட நபர்களைக் கொண்டு அணியுங்கள். இதை ஞாயிற்றுக்கிழமை தான் அணிய வேண்டும். 
  • கேதுவும் சந்திரனும் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தோடு இணக்கமாக இல்லாதபோது, ​​​​ஒரு நபர் திட்டம் போடுவார். ஆனால், அதை செயல்படுத்தமாட்டார். இவர்கள் தினமும் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரைக்கும் சூரியன் உதயத்தை நோக்கி அமர வேண்டும். தினமும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். 
  • தினமும் காலையில் ஒரு நிமிடம் யாகம் செய்ய வேண்டும். பசு நெய்யில் கற்பூரம் வைத்து விளக்கில் ஒளியேற்றுங்கள். அதன் மீது புதிய ரொட்டி வைத்து சூரியனை நமஸ்கரியுங்கள். அப்போது காயத்ரி கீர்த்தனை அல்லது ஏதேனும் கீர்த்தனையை சொல்லி பிராத்தனை செய்யுங்கள். 
  • வியாழன்கிழமை அன்று ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரம் அணிந்து கொள்ளுங்கள். இந்த மோதிரத்தின் வளையம் வட்டமாக மூடியபடி வேண்டும். குறிப்பாக திறந்திருக்கக்கூடாது. 
  • நாள்தோறும் அஸ்வகந்தா தூளை, பாலுடன் சர்க்கரை கலந்து அருந்த வேண்டும். 
  • தினமும் காலையில் எழுந்து சுத்தமாக பூஜை செய்வதை மறக்க வேண்டாம். 
  • தெற்கு திசையை நோக்கி அமர்ந்த வண்ணம் உங்கள் முன்னோரை நினைவு கூருங்கள். உங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கோருங்கள். பித்ரூ சாபம் நீங்க வேண்டும். 

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு இப்படி குடிச்சு பாருங்க... கொழுத்த தொப்பையும் கரைஞ்சு போய்டும்

பித்ரூவிற்கு பூஜை 

ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் கொஞ்சம் எள் சேர்த்து கொள்ளுங்கள். 'ஓம் பித்ரு தேவாய நமஹ ஓம் பித்ரு சாந்தி பவ' என பிரார்த்தியுங்கள். பிறகு தெற்கு திசையை நோக்கி தண்ணீரை தெளியுங்கள். இது உங்களுடைய அசௌகரியத்தை நீக்க உதவும்.

  • எப்போதும் பெற்றோருடன் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது முக்கியம்.  
  • கனவுகளை அடைய உங்களுடைய விரலில் தங்கம் அல்லது வெள்ளி மோதிரம் போட்டு கொள்ளலாம். அது 50% தங்கம், 50% வெள்ளியைப் பயன்படுத்தி உருவானதாக இருந்தால் நல்லது. அந்த மோதிரம் மன உறுதியை அதிகரிக்கவும், இலக்குகளை அடையவும் உங்களுக்கு துணை செய்யும். 

இதையும் படிங்க: புருவ மத்தியில் விபூதியை பவித்ரமான இந்த விரலில் தொட்டு வைத்தால் தீவினைகளில் தீரும்.. இது உண்மையா?

Follow Us:
Download App:
  • android
  • ios