Asianet News TamilAsianet News Tamil

காதல் ஜெயிக்குமா? அதிர்ஷ்டம் தேடி வீடு தேடி வருமா? வராஹமிகிரர் சொன்ன வலாட்டி குருவி சகுனம்!!

நம் நாட்டில் இன்றைக்கும் சகுனம் பார்த்து பல காரியங்கள் செய்கின்றனர். பூனை குறுக்கே போனால் சகுனத்தடையாக நினைக்கின்றனர். அதே போல பல்லி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம் படித்து அதன்படி பல காரியங்களில் முடிவு எடுக்கின்றனர். கிளி ஜோதிடம் பார்த்து எதிர்காலத்தை தெரிந்து கொள்பவர்கள் இன்றைக்கும் பலர் இருக்கின்றனர்.  காகம் கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கும் பரவலாக உள்ளது.  அதே போல பண்டைய காலத்தில் வராஹமிகிரர் என்ற ஜோதிட கணிதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  வாலாட்டி குருவிகளை எங்கே பார்த்தால் என்ன நடக்கும் என்று கணித்துள்ளார். அதில் சுவாரஸ்யமாக பல தகவல்கள் உள்ளன படியுங்கள்.

Sagunam Palangal: Wagtail's behavior can predict luck and fortune
Author
First Published Jul 26, 2024, 12:23 PM IST | Last Updated Jul 26, 2024, 8:21 PM IST

வலாட்டி குருவிகள்:
வாலாட்டி குருவிகளை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. கறுப்பாகவும், மஞ்சளும் வெள்ளையும் கலந்த நிறத்திலும், வெள்ளை, கறுப்பு கலந்த நிறத்திலும் வாலாட்டி குருவிகளைப் பார்த்து மனது ஆனந்தப்படும் அதே நேரத்தில் நல்லதாகவும், கெட்டதாகவும் சில சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கான காரணத்தை 1500 ஆண்டுகளுக்கு முன்பே தனது பிருஹத் சம்ஹிதா என்ற நூலில் கணித்து எழுதியுள்ளார் வராஹமிகிரர்.

காதலை ஜெயிக்க வைக்கும் குருவிகள்:
வாலாட்டி குருவிகள் வண்டல் மண்ணில் அமர்ந்திருப்பதை பார்த்தால்  அன்றைக்கு நல்ல சுவையான உணவு கிடைக்கும். மாட்டுச் சாணத்தின் மீது நின்றிருக்கும் பறவைகளைப் பார்த்தால்  பால், தயிர், வெண்ணெய் கிடைக்கும். ஆடு, செம்மறி ஆட்டின் முதுகில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் காதல் கைகூடும். காதலன், காதலி உடனே சேருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நல்ல சகுனங்கள்
ஏரி, ஆறு,குளங்கள், யாக சாலைகள், மாட்டுத் தொழுவம் ஆகிய இடங்களில் நின்று கொண்டு இருக்கும் வாலாட்டி குருவிகளைப் பார்த்தால் நல்லதே நடக்கும். பூ, பழம் உடைய மரங்கள், கோவில், நல்லோர் கூடிய சபைகள், பசு,யானை, குதிரை, பாம்பு ஆகியவற்றின் முதுகில் அமர்ந்திருக்கும் போது பார்ப்பது நல்ல சகுனம் என்கிறார் வராஹமிகிரர்.

புதையல் கிடைக்கும்:
வாலாட்டிக் குருவிகளை புல்தரையில் நின்று மேய்ந்து கொண்டிருக்கும் போது பார்த்தால் பட்டுத்துணிகளும், ஆடைகளும் கிடைக்குமாம். தண்ணீர் குடிக்கும் நிலையிலும் காலை நேரத்திலும் பார்த்தால் நல்ல செய்தி வரும். வாலாட்டிக் குருவிகள் மலஜலம் கழிக்கும் இடத்தில் தோண்டினால் நிலக்கரி கிடைக்கும். புணரும் இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும். உணவைக் கக்கும் இடத்தில்  மைகா, அபிரகம் கிடைக்கும் என்கிறார் வராஹமிகிரர்.

செல்வ இழப்பு ஏற்படும்:
சாம்பல், எலும்புகள் மீது, சுடுகாட்டில், மண்ணாங்கட்டியில், கழுதை, ஒட்டகம், எருமை முதுகின் மேல், வீட்டுக் காம்பவுண்ட் சுவர் மீது, சிறகு அடிக்கும் நிலையில், மாலை வேளையில் பார்த்தால் கெட்ட செய்திகள் தேடி வருமாம். அதே நேரத்தில் வண்டிகள் மீது நின்று கொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்தால் நாட்டுக்கு சேதம் ஏற்படுமாம், வீட்டுக்கூரை மீது நின்றிருக்கும் பறவைகளைப் பார்த்தால் செல்வ இழப்பு ஏற்படும். தோல் முதலிய பொருட்களின் மீது நின்று கொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்தால் சிறைவாசம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எந்த கலர் குருவிக்கு என்ன நிறம்:
முகம் முதல் கழுத்து வரை கறுப்பாக இருக்கும் வாலாட்டிகளுக்கு சம்பூர்ணம் என்று பெயர். இதை முதலில் கண்டால் உங்கள் ஆசை அபிலாஷைகள் நிறைவேறும். வெள்ளைக் கழுத்து, அதில் கறுப்புப் புள்ளிகளுடன் உடைய வாலாட்டிக் குருவிகளுக்கு ரிக்தா என்று பெயர்.  அந்த குருவிகளை முதலில் பார்த்தால் அன்றைய தினம் ஏமாற்றமான செய்திகளே கிடைக்கும். மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்.

என்ன பரிகாரம்:
கறுப்பு வெள்ளை கலந்த வாலாட்டி குருவிகளை பார்த்து விட்டோமே ஏதேனும் கெட்ட செய்தி வருமோ என்று கலங்க வேண்டாம். எல்லா விதிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருக்கும். நாம  தீய சகுனங்களை கண்டாலும், உடனே பிராமணர்களையும் குருவையும் புனித மகான்களையும் வணங்கினாலோ ஒரு வாரத்துக்கு மாமிச உணவு சாப்பிடாமல் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டாலோ தீமைகள் நடைபெறாது என்றும் வராஹமிகிரர் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios