Asianet News TamilAsianet News Tamil

சூரியனுக்கு முன்னால் ஓடும் இந்த 7 வெண்மைக் குதிரைகள் ஓவியத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..?

வாஸ்து சாஸ்திரத்தில் ஓடும் வெள்ளை நிற ஏழு குதிரைகளின் ஓவியத்துக்கு சிறப்பு பண்புகள் சொல்லப்பட்டுள்ளன. வீட்டில் இந்த ஓவியத்தை மாட்டி வைப்பதன் மூலம் பல்வேறு ந்ன்மைகள் கிடைப்பதாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
 

painting of 7 running horses is very important in Vastu
Author
First Published Nov 15, 2022, 12:40 PM IST

நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள், ஆனாலும் உங்களுக்கு பலன் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களாகும். அதனால் தான் நீங்கள் எவ்வளவு உழைத்தாலும், அதன்மூலம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காமல் போகிறது. எதிர்மறை ஆற்றலை உங்களிடமிருந்தும் வீட்டிலும் இருந்தும் விலக்கி வைக்க, பல்வேறு பலன்கள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இதனால் நம்மைச் சுற்றியுள்ள நல்ல ஆற்றல், நமக்கு கிடைக்கும். அதை பயன்படுத்தி உங்களுடைய வாழ்க்கையை வெற்றிக்கரமாக மாற்றலாம். உங்கள் வாழ்க்கையிலும் வீட்டிற்கும் நேர்மறையைக் கொண்டுவரக்கூடிய பல விஷயங்கள் வாஸ்துவில் உள்ளன. ஏழு குதிரைகளின் படத்தை வீட்டில் மாட்டி வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் நேர்மறையை கொண்டு வரும். இந்த ஓவியத்தின் பல்வேறு முக்கியத்துவம் குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஓடும் 7 குதிரைகள் படத்தின் முக்கியத்துவம்

வாரத்தில் மொத்தம் 7 நாட்கள், வானவில் இருக்கும் வண்ணங்கள் 7 , சப்தரிஷி, திருமணத்தில் சப்தபதி, ஏழு பிறப்புகள், இசையில் ஏழு குறிப்புகள் போன்ற ஏழு குதிரைகள் கொண்ட புகைப்படத்துக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளன. இவ்வளவு கூர்ந்த தகவல்களுடன், முன் எப்போதும் அந்த படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். அதேபோன்று அந்த படத்தை மாட்டிவைத்துள்ள வீடுகளிலும், அதனுடைய பலன்களை சொல்லி கேட்டிருக்கமாட்டீர்கள். உண்மையில் அவர்கள் பலரும் வாஸ்துக்காகவே அந்த படத்தை மாட்டிவைத்திருப்பார்களே தவிர, அழகுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

குடும்பத்தின் மீது கண் திருஷ்டி விழாமல் பாதுகாக்கும் ஆகாச கருடன் கிழங்கு- முழு பலன்கள் இதோ..!!

இந்த படத்தை முதலில் வீட்டில் மாட்டிவைக்க காரணமாக இருப்பது சூரியன் தான். இந்துப் புராணங்களின் படி சூரியக் கடவுள் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட குதிரைகளில் வலம் வருவதாக சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் மாட்டி வைக்கப்படும் 7 குதிரைகள் ஓவியமும் சூரியனை தான் குறிக்கின்றன. சூரிய பகவான் ஏழு குதிரை ரதத்தில் சவாரி செய்யும் படத்தை வீட்டில் வைத்தால் மிகவும் மங்களகரமானது. வீட்டில் நல்ல காரியங்கள் நடப்பதற்கு, எப்போது அந்த படத்தை கிழக்கு திசையில் மாட்டிவைக்க வேண்டும். 

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால், வீட்டின் வடக்குத் திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்ட வேண்டும். வாழ்க்கையில் பெயர், புகழ், மரியாதை பெற வேண்டுமானால் வீட்டின் தெற்கு திசையில் ஓடும் குதிரைகளின் படத்தைப் போடலாம். இது உங்களுக்கு வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைத் தரும் மற்றும் உங்கள் பணி நான்கு திசைகளிலும் பாராட்டப்படும்.

சூரிய உதயத்துக்கு முன் அரச மரத்தடி விநாயகரை வணங்கக்கூடாது- ஏன் தெரியுமா?

தென் திசையில் ஓடும் குதிரைகளின் ஓவியம் வரைய முடியாத பட்சத்தில் வீட்டின் பிரதான கதவின் ஜன்னலில் ஓடும் குதிரையின் சிலையை வைக்கலாம். குதிரையின் முகம் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கடன் தொல்லை இருந்தால், ஒரு ஜோடி செயற்கை குதிரைகளை மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் கடவுள் லட்சுமி வீட்டில் எப்போதும் தங்கி, மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிப்பார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

வெள்ளை குதிரைகள் நேர்மறை ஆற்றலின் சின்னங்கள். இந்தப் படத்தை எங்கு வைத்தாலும் அதில் உள்ள குதிரைகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரக்கூடிய பண்புகள், இந்த படத்துக்கு உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios