Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருள்கள்..!

இறைவனிடம் மனம் உருக வேண்டினால்  வேண்டியது கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் வழிபடும் முறை சரியானதாக இருக்க வேண்டும்.  பூஜைக்கான பொருள்களை சரியாக பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த வேண்டிய பொருள்கள் என்னென்ன என்பதை அறிந்து செய்தாலே  இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
 

Do not perform puja at home without it
Author
First Published Sep 14, 2022, 4:13 PM IST

நமது வீட்டில் பூஜைகள் செய்திடும் பொழுது கட்டாயம் பஞ்சபூதங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இறைவன் பஞ்சபூதம் இருக்கும் இடங்களில் தான் வாசம் செய்கிறார். வீட்டில் சாமி கும்பிடும் பொழுது வேண்டிய வேண்டுதல்கள் பலிக்காமல் போவதற்கு நாம் செய்யும் இந்த சில விஷயங்களும் காரணமாய் அமைகிறதாம்! வேண்டுதல் உடனே நிறைவேற பூஜை செய்யும் பொழுது என்னென்ன கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

முதலில் வீட்டில் பூஜை செய்வதற்கு முன்பாக  கட்டாயம் பூஜை அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒருபோதும் தெய்வங்கள் தூசுகள் நிறைந்துள்ள இடங்களில் வசிப்பதில்லை. குறிப்பாக மகாலட்சுமிக்கு பதிலாக அங்கு துர் தேவதைகள் வாசம் செய்யும். அதனால் பூஜை அறையை சுத்தமாக வைப்பதோடு, அதில் பஞ்சபூதங்கள் இடம் பெறும்மாறு  பூஜை செய்ய வேண்டும்.

நமது பூஜை அறையில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களும் கண்டிப்பாக இருப்பது அவசியமாகும். இதில் நிலம், ஆகாயம், காற்று ஆகிய மூன்று பூதங்களும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பூஜை அறையே நிலத்தில் தான் அமைய பெற்றிருக்கிறது. பூஜை பொருட்கள் அனைத்தும் ஆகாய மார்க்கமாகத்தான் வைக்கப்பட்டிருக்கும். எங்குமே நிறைந்திருப்பது காற்று. அதேபோன்று பூஜை அறை திறந்த நிலையில் இருக்க வேண்டும் எல்லா பக்கங்களும் அடைபட்டிருக்குமாறு அமைக்கக் கூடாது. மீதமிருக்கும் இரண்டு பூதங்கள் மிக அவசியமாகும். நெருப்பு மற்றும் நீர் பிரதானமாக வைத்து பூஜையை துவங்க வேண்டும் என்பது தான் கட்டாயமாகும்.

விளக்கு ஏற்றுவதால் உண்டாகக்கூடிய ஜோதியில் தான் இறைவன் ஆவாகனம் ஆகிறான்.  நீர் வழியாகத்தான் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் ஆவாகனம் ஆகிறது. எனவே இவ்விரண்டு பூதங்களும் அன்றி நாம் பூஜையை துவங்கக் கூடாது.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எந்த ஒரு பாத்திரத்தை பயன்படுத்தியும் நீரை படைக்கக் கூடாது. அதற்கென தனியாக பஞ்சபாத்திரம், கலசங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். நாளுக்கு நாள் காற்றில் தண்ணீர் குறைய ஆரம்பிக்கும். அதனால் நீரை எப்பொழுதும் காத்திருக்க வைக்கக்கூடாது. தண்ணீர் வைத்த பிறகு பூஜையை தொடங்கி, பூஜையை முடித்த பின்பு அந்த தண்ணீரை வீட்டில் இருக்கும் அனைவரும் பருகிவிட வேண்டும்.

கோவில்களில் தீர்த்தம் கொடுக்கப்படுவது போல, பஞ்சபாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக வேண்டும். அதை வீணாக கீழே கொட்டுவதோ அல்லது அப்படியே விட்டு விடுவது போன்ற செயல்கள் செய்தால் உங்கள் வேண்டுதல் பலிக்காமல் போகும் வாய்ப்பு உண்டு, எனவே இந்த தவறை ஒரு போதும் இனியும் செய்யாதீர்கள்.

இனி தினசரி வழிபாட்டு முறையில் இத்தகைய குறைபாடுகள் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள் இறைவனின் அருள் பரிப்பூரணமாக கிடைக்கும். வீட்டில் அமைதி நிலவும். வளம் செழிக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். மகாலஷ்மி மகிழ்ச்சியுடன் வாசம் செய்வாள்.

Follow Us:
Download App:
  • android
  • ios