Asianet News TamilAsianet News Tamil

நாளை ஆடி மாத தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு 'இந்த' 1 விளக்கு ஏற்றி வழிபடுங்க.. கடன் தொல்லை நீங்கும்!

Aadi Month Theipirai Ashtami 2024 : ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி எப்போது? அந்த நாளில் மேற்கொள்ள வேண்டிய பைரவ விரத வழிபாட்டு முறை, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

aadi month theipirai ashtami 2024 date puja time and worship method for bhairava in tamil mks
Author
First Published Jul 27, 2024, 10:13 AM IST | Last Updated Jul 27, 2024, 10:26 AM IST

ஆடி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்து பைரவரை வழிபட ஒரு சிறந்த நாளாகும். பைரவர் சிவபெருமானின் உக்கிரமான அம்சங்களில் ஒருவராவார். எனவே அஷ்டமி நாளில் கால பைரவரை இணைத்து வழிபடுவதால் பலவிதமான இன்னல்கள் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

சந்திரனின் வளர்பிறை தேய்பிறை, அதாவது அமாவாசை பௌர்ணமிக்கு பிறகு வரும் திதிகள் தான் வளர்பிறை தேய்பிறை திதியாக கருதப்படுகிறது. அம்மாவாசை பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது மாதம் அஷ்டமி ஆகும். அதாவது, ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு பிறகு தேய்பிறை நாட்களில் வரும் எட்டாவது நாள் தான் தேய்பிறை அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த 2024 ஆம் ஆண்டு தேய்பிறை அஷ்டமி எப்போது வருகிறது, அஷ்டமி திதிக்கான நேரம் மற்றும் அந்த நாளில் மேற்கொள்ள வேண்டிய பைரவ விரத வழிபாட்டு முறை, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தேதி மற்றும் நேரம் 2024:
இந்த 2024 ஆம் ஆண்டு ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமியானது நாளை (ஜூலை.28) அதிகாலை 1.24 மணிக்கு தொடங்கி, இரவு 11.11 மணிக்கு முடிகிறது.

இதையும் படிங்க:  ஆடி மாசம் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன் தெரியுமா? அறிவியல் உண்மை இதோ..

பைரவரை வழிபடும் முறை:
நாளை ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி என்பதால், அந்நாளில் விரதம் இருந்து வைரவரை வழிபடுங்கள். மேலும் அருகில் இருக்கும் பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலுக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பியுங்கள். நைவேத்தியமாக செவ்வாழை கொடுங்கள். மேலும், தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கினை ஊற்றி, அதில் திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி பைரவரை வழிபடுங்கள்.இந்நாள் முழுவதும் இறைவழிப்பாட்டில் ஈடுபடுங்கள். சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. 

இதையும் படிங்க:  ஆடி மாத ஸ்பெஷல் அம்மன் கூழ்.. இனி வீட்டிலேயும் செய்யலாம்.. ரெசிபி இதோ!

பைரவருக்கு விரதம் இருந்து வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்:
ஆடி தேய்பிறை அஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் தீராத பண கஷ்டங்களும் தீரும், தொழில் வியாபாரங்களில் எதிரிகள் தொல்லை ஒழியும், நிதி வருமானம் பெருகும், துரதிஷ்ட சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். ஏவல், செய்வினை போன்றவை பழிக்காமல் போகும், கொடிய நோய்கள் குணமாகும்.

கால பைரவருக்கு விளக்கேற்றி வழிப்பட்டால் கிடைக்கும் நன்மைகள்: 
ஆடி தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் நாள் பட்ட நோய்கள் மற்றும் கடன் பிரச்சினைகள் போன்றவை தீரும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பவர்கள் பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios