Asianet News TamilAsianet News Tamil

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் கழுகுப் பார்வையில் இருந்து விடுபட நிலைவாசலில் இதனை கட்டி விட்டால் போதும்!

அடுத்தவர்களின் கண் திருஷ்டி,எதிர் மறை ஆற்றல்,வசியம் போன்றவைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள என்ன பரிகாரம் செய்யலாம்? எப்போது செய்யலாம்? போன்றவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

A simple Remedy to protect from Evil eye and Negative energy of others
Author
First Published Mar 23, 2023, 7:31 AM IST

பொதுவாக நம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் நம்முடன் நெருக்கமாக, தோழமையாக பழகினாலும் ஒரு சிலர் அடுத்தவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்ன செய்து முன்னேறுகிறார்கள்? எப்படி அவர்களுக்கு இது சாத்தியம் ? என்ன செய்திருப்பார்கள்? என்று எப்போதும் அடுத்தவர்களை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பார்கள்.

நாம் முன்னேறுவதை முதலில் தெரிந்து கொள்வது நம் வீட்டில் அருகில் இருக்கும் அண்டை அயலார் தான். இவர்களில் ஒரு சிலர் நல்ல மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். ஒரு சிலர் வஞ்சம்,பொறாமை எண்ணம், எதிர்மறை ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இப்பேற்பட்டவர்கள் சமயத்தில் எதிர்மறை ஆற்றலுடன் நம் வீட்டிற்குள் வருவார்கள் இப்படி அவர்கள் வந்து சென்றவுடன் வீட்டில் சின்ன அளவிலான சண்டை உருவாகி பின் அது பெரிய அளவில் ஒரு பிரச்சனையை உண்டாக்கும். அல்லது நன்றாக விளையாடிக் கொண்டுருந்த பிள்ளைகள் தீடீரென்று தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள். தவிர இப்படி பட்டவர்கள் நம் வீட்டிற்கு வந்து சென்ற பின் வீட்டில் சிறு சிறு பிரச்சனைகள் வீட்டுக் குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ உடல் உபாதை, கணவன் மனைவி இடையே சிறு வாக்கு வாதம் என்று ஒன்று மாற்றி ஒன்றாக அரங்கேறத் தொடங்கும். இப்படி ஏதோ ஒன்று தொடரும் பட்சத்தில் நாம் இதனை சுலபமாக அறிந்து விடலாம். இது நிச்சியமாக எவரோ ஒருவரின் திருஷ்டி அல்லது எதிர்மறை ஆற்றல் என்று.

அடுத்தவர்களின் கண் திருஷ்டி,எதிர் மறை ஆற்றல்,வசியம் போன்றவைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள என்ன பரிகாரம் செய்யலாம்? எப்போது செய்யலாம்? போன்றவற்றை இந்த பதிவில் பார்க்கலாம். 

இம்மாதிரியான பிரச்சனைகளில் விழாமல் இருக்கும், அடுத்தவர்களின் கழுகு பார்வையில் சிக்காமல் இருக்க இந்த எளிய சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்தால் போதும்.

திருஷ்டி சுற்றும் பரிகாரம் :

நன்றாக இருந்த ஒருவர் தீடீரென்று ஏதோ ஒன்றை பார்த்து பயந்தது போல் இருப்பார்கள் அல்லது உடல் சோர்ந்து வித்தியாசமாக காணப்படுவார்கள். இதற்கு 7 சின்ன வெங்காயத்தை கையில் எடுத்து அதனை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை 3 முறை சுற்றி வரை அதனை முச்சந்தியில் போய் கால் படாத இடத்தில் வீசி விட்டு வந்தால் அடுத்த நாளில் அந்த நபரின் நடைமுறையில் வித்தியாசம் தெரியும்.
சின்ன வெங்காயத்திற்கு எதிர்மறை ஆற்றல் ,கண் திருஷ்டி போன்றவைகளை விரட்டும் தன்மை கொண்டது.

நிலை வாசல் பரிகாரம்:

ஒரு ஊசியில் நூல் கோர்த்து முதலில் 1 சின்ன வெங்காயம்,பின் 1 வர மிளகாய் என்று மொத்தம் 7 வெங்காயமும், 7 மிளகாயும் சேர்த்து கோர்க்க வேண்டும். இதனை வீட்டின் நிலைவாசலில் கட்டி விட்டால் வீட்டிற்கு வரும் துர் சக்தி, எதிர்மறை சக்தி, கண் திருஷ்டி போன்றவை நம்மை அண்டாது.

இதனை அம்மாவாசை அன்று செய்வது மிகச் சிறப்பு அல்லது ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6 மணியளவில் நிலை வாசலில் கட்டலாம்.. இதனை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மாற்றும் போது முன்பு கட்டியிருந்த வெங்காயத்தை
யார் கால் படாத இடத்தில் சென்று தூரமாக எரிந்து விட வேண்டும்.

இதனை வாசலில் கட்டி வைப்பதால் தீய எண்ணத்துடன் வருபவர்களின் பார்வை நம்மை அண்டாது. அப்படியே வருபவர்கள் நம் வீட்டிற்குள் வராமல் அப்படியே சென்று விடுவார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள் !

Follow Us:
Download App:
  • android
  • ios