தொடர்ந்து மழை இல்லாத காரணத்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை மழைவேண்டி யாக பூஜை நடத்தப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுன்னது. பொது மக்களும் பெண்களும் தண்ணீர் குடங்களுடன் தெருக்களில் அல்லாடிக் கொண்டிருக்கினறனர். சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டன. ஏராளமானோர் வீடுகளை காலி செய்துவிட்டு சொந் ஊருக்கு திரும்பி வருகின்றனர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, மழை வேண்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை யாகம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.