வென்றது தர்மயுத்தம்...மலர்ந்தது ஓபிஎஸ் முகம்.!
வென்றது தர்மயுத்தம்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்ததையடுத்து, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் 6 மாத தர்ம யுத்தத்திற்கு பிறகு அங்கு கால் பதித்தார்
6 மாதத்திற்கு பின் அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஒபிஎஸ் அவர்களை அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கடந்த 6 மாதமாக தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தர்மயுத்தத்தை நடத்தி வந்த ஓபிஎஸ் – க்கு இன்று தான் அவருடைய தர்மயுத்தம் முடிந்தது .
மலர்ந்தது ஓபிஎஸ்
இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தன. கடந்த 6 மாத காலமாக எதிரணியாக இருந்த ஓபிஎஸ் அணி ,இப்போது ஓரணியாக மாறியது. அணிகள் இணைப்பை உறுதிபடுத்தும் விதமாக முதலில் தன்னுடைய உரையை தொடங்கினார் ஓபிஎஸ்.பின்னர் இபிஎஸ் பேசினார். இதிலிருந்து ஓபிஎஸ் அவர்களின் தர்மயுத்தம் வென்றது, அவருடைய முகமும் மலர்ந்தது