வேலுார் ரெய்டில் சிக்கிய பணத்தை அடுத்து அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில்  வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்திருப்பதால். வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற அச்சத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன. 

வேலூரில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், அமமும் சார்பில் பாண்டுரங்கனும் களம் இறங்கியிருக்கிறார்கள். அண்மையில் வேலூரில் நடந்த ஐ.டி. ரெய்டில் கட்டுக்கட்டாக 11.53 கோடி ரூபாய் சிக்கியது. வேலூரில் வார்டுகள் வாரியாக வினியோகிக்க அந்தப் பணத்தைப் பிரித்து வைத்திருந்ததால், வாக்காளர்களுக்கு தருவதற்கான பணம் என்பது உறுதியானது.