Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் குடும்ப ரேஞ்சுக்கு நீங்களும் வசதியாய் செட்டிலாகணுமா..? சிம்பிளா இது நடந்தால் போதும்! அது எது..?

நம்ம பசங்க ஒழுங்கா ஆட்சி நடத்துறாங்களான்னு அம்மாவின் ஆவி, மேலோகத்தில் இருந்து எங்களை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம். (இருக்கலாம். ஆனால் ஓவர் உயரத்துல இருந்து கண்காணிக்கிறதாலே அம்மா ஆவிக்கு தெளிவா எதுவும் தெரியலைன்னு நினைக்கிறோம். இல்லேன்னா இந்நேரத்துக்கு அடிச்சு அலறவிட்டிருக்காதா பல பேரை?)
 

Will Stalin's family feel safe for you? Similila is enough! What is that
Author
Tamil Nadu, First Published Apr 3, 2019, 4:36 PM IST

*    நம்ம பசங்க ஒழுங்கா ஆட்சி நடத்துறாங்களான்னு அம்மாவின் ஆவி, மேலோகத்தில் இருந்து எங்களை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம். (இருக்கலாம். ஆனால் ஓவர் உயரத்துல இருந்து கண்காணிக்கிறதாலே அம்மா ஆவிக்கு தெளிவா எதுவும் தெரியலைன்னு நினைக்கிறோம். இல்லேன்னா இந்நேரத்துக்கு அடிச்சு அலறவிட்டிருக்காதா பல பேரை?)

*    மாம்பழத்துக்கு பதிலாக ஆப்பிள் பழத்துக்கு வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் போலவே அ.தி.மு.க. வேட்பாளர்களும் ஜோக்கர்கள்தான். சிந்தனா சக்தியே இல்லாதவர்கள்: காங்கிரஸின் மோகன் குமாரமங்கலம். (ஓ...ஆனாலும் உங்க கட்சியோட மாஜி மாநில தலைவர் தங்கபாலுவை அடிச்சுக்க முடியுமா ஜி? அ.தி.மு.க. அமைச்சர்கள் ரெண்டு வருஷமா செஞ்ச கூத்தை, ஒரே நாள்ள கன்னியாகுமரி ராகுல் மேடையில் மொழிபெயர்ப்புங்கிற பெயர்ல பல்லாங்குழி ஆடி, பரிதவிக்க விட்டுட்டாரே?)

*    மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன், கோபாலபுர இல்லத்தில் கருணாநிதிக்கு பியானோஇசையால் இசை அஞ்சலி செலுத்திய லிடியன் நாதஸ்வரத்தை கவுரவப்படுத்தினார்: செய்தி. (ஹும், தேர்தல்ன்னு ஒண்ணு வந்து, அதில் வேட்பாளர்ன்னு ஒருவராகிட்டா என்னென்ன ஸ்டண்டை எல்லாம் போட வேண்டியிருக்குது. நாதஸ்வரமும், பியானோவும் இசைக்கருவிகள்னு தெரியும். ஆனால் ஒரு நாதஸ்வரமே இங்கே பியானோ வாசிக்குதேன்னு அய்யோ பாவம், தயாவே தாறுமாறா கன்பியூஸ் ஆகியிருப்பாரு.)

*    பா.ஜ.க. ஆட்சியில் யாராவது ஒரு கருத்தை சொன்னாலே, அவரை ‘அர்பன் நக்சலைட்’ என்று சித்தரித்து விடுகிறார்கள்: கவிதாயினி சல்மா.
(அதுசரி, ஆனா தி.மு.க. ஆட்சியில ஒருத்தன் கோயில் பக்கம் நின்னு சாமி கும்பிட்டாலே ‘இந்துத்வ வெறியன்! மதவாதி! பாசிஸ்ட்!’ன்னு பக்கம் பக்கமா பேர் வெச்சு, கொலையா கொல்லுவாய்ங்களே! அதுக்கு என்னாங்க கவிதாயினி மேடம் பண்ணுறது?)

*    நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளிவரும் முன்பேயே தமிழக மக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைத்தான் குறிப்பிடுகிறேன்: மு.க.ஸ்டாலின். (ஒருவிதத்துல உண்மைதான் தல. ஆனாலும், தேர்தல் அறிக்கையில சொன்னதையெல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு செய்தாகணும்னு இருந்தால், இந்தியா எப்பவோ ஆஸ்திரேலியா மாதிரி ஆகியிருக்கும். நாங்க எல்லோரும் உங்க லெவலுக்கு வசதியில வளர்ந்திருப்போம்.)

Follow Us:
Download App:
  • android
  • ios