அதன் ஒரு பகுதியாக முதல்வர் மம்தாவுக்குக் குடைச்சல் கொடுக்கும் வகையில் அந்த மாநிலத்தில் புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அந்த இடத்துக்கு கிரண்பேடியை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு செக் வைக்கும் வகையில் அந்த மாநில ஆளுநர் பொறுப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source


மேற்கு வங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரிகளுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட அரசியல் மோதல் போல, இப்போது திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே அரசியல் மோதல் இருந்துவருகிறது. இரு கட்சிகளின் தொண்டர்களும் கீரியும் பாம்புமாக மோதிக்கொள்வதால், அரசியல் மோதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. மேலும் மத்திய அரசோடு மம்தா பானர்ஜி தொடர்ந்து மோதல் போக்கையும் கடைபிடித்துவருகிறார். இதனால், மம்தாவுக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளை பாஜக தொடங்கியிருக்கிறது.

