Asianet News TamilAsianet News Tamil

இவர்களே எதையாவது செய்துவிட்டு எங்கள் மீது பழிபோட சதி... கொஞ்சம் கூட அசராமல் திருப்பி அடிக்கும் தினகரன்..!

சசிகலாவை வரவேற்க அவர் மீது அன்பு கொண்டவர்கள் தயாராகும் நிலையில், ஒன்றிரண்டு பேர் ஏன் பதற்றமடைகிறார்கள்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Why are ministers so nervous? TTV Dhinakaran question
Author
Tamil Nadu, First Published Feb 6, 2021, 4:14 PM IST

சசிகலாவை வரவேற்க அவர் மீது அன்பு கொண்டவர்கள் தயாராகும் நிலையில், ஒன்றிரண்டு பேர் ஏன் பதற்றமடைகிறார்கள்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானார். அப்போது, மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வரும்போது அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரை பயன்படுத்தினார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தனர். 

Why are ministers so nervous? TTV Dhinakaran question

இந்நிலையில், சசிகலா, டிடிவி.தினகரன் மீது இன்று மீண்டும் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், அமமுகவினர் 100 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழகத்துக்கு வருவோம் என கூறுகின்றனர். மேலும், தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க சசிகலா ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.

Why are ministers so nervous? TTV Dhinakaran question

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சசிகலா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு பழிபோட சதி  செய்கிறார்களோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சசிகலா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என விமர்சனம் செய்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios