Asianet News TamilAsianet News Tamil

மூன்று காலி எம்.பி.களுக்கான இடைத்தேர்தல் எப்போ.? தேர்தல் ஆணையத்துக்கு ஞாபகப்படுத்திய டி.ஆர்.பாலு.!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திமுக மீண்டும் மனு அளித்துள்ளது. 
 

When is the by-election for the three vacant MPs.? DR Palu reminded the Election Commission!
Author
Delhi, First Published Jul 29, 2021, 9:30 PM IST

தமிழகத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக மக்களவை எம்.பி.க்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனு அளித்தார். 3 இடங்களுக்கும் தனித்தனியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் திமுக குறிப்பிட்டிருந்தது. ஆனால், திமுக மனு அளித்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் இன்னும் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.When is the by-election for the three vacant MPs.? DR Palu reminded the Election Commission!
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சென்ற முறை தேர்தல் ஆணையத்திடம் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தோம். தற்போது திமுக தலைவர் உத்தரவின் பேரில் நினைவூட்டல் மனுவை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளோம். அதனால் மிக விரைவிலேயே தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது” என டி.ஆர்.பாலு தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios