Asianet News TamilAsianet News Tamil

என் பொண்ணு கேஷுவலாக கேட்குறா! ரெய்டுக்கு அடுத்து எப்போ வர போறீங்கன்னு!அசராமல் அசால்டாக பதில் சொன்ன விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் வீடு உள்பட 13 இடங்களில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் வீடு அலுவலகம் உள்பட 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தப்பட்டது.

What did the anti-corruption department seize? Vijayabaskar information
Author
First Published Sep 14, 2022, 6:42 AM IST

அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கக்கூடிய நேரத்தில் மூன்று ரூமையும், ஒரு ஹாலையும் சோதனை செய்வதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் வீடு உள்பட 13 இடங்களில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் வீடு அலுவலகம் உள்பட 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபாஸ்கர்;- நான் குடியிருக்கிறது அப்பார்ட்மெண்ட் 3 அறைகள், ஒரு ஹால், 2000 ஸ்கொயர் ஃபீட். 12 மணி நேரம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு முழுமையான அரசு இயந்திரத்தை எத்தனையோ மக்கள் பிரச்சனையையெல்லாம் மறந்துவிட்டு ஒரு தனிப்பட்ட நபரின் மீது கொண்ட காட்டத்தால், அரசியல் காழ்ப்புணர்ச்சி  காரணமாக இந்த சோதனை நடந்ததாக கருதுகிறேன். 

What did the anti-corruption department seize? Vijayabaskar information

முதலில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்களுக்கு கழக ரீதியாக துணை நின்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், நேரில் வருகை தந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், காலையிலிருந்து இங்கே இருக்கக்கூடிய மாவட்ட கழகத்தினுடைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்ட இங்கே இருக்கக்கூடிய வட்டக் கழக, பகுதி கழக அனைத்து நிர்வாகிகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் கழக நிர்வாகிகள் என  அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே இதே போன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை நான் எதிர் கொண்டிருக்கிறேன். திரும்பவும் 2வது முறையாக சோதனையின் நடைபெற்றுள்ளது.  நான் செய்தியாளர்களை சந்திக்க வரும்போது எனது வீட்டில் இருந்து 129 ஆவணங்கள் கிடைத்ததாக தொலைக்காட்சியில் சொன்னார்கள். ஆனால், கொடுத்த ரிட்டன் காப்பியில் எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியாக என்கிட்ட இருந்த 2 மொபைல் போனை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று உள்ளார்கள். 

What did the anti-corruption department seize? Vijayabaskar information

என்னுடைய ஆதார் கார்டு, மனைவியின் ஆதார் கார்டு, குழந்தைகளின் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. போகும்போது கூட என் பொண்ணு கேஷுவலாக கேட்டாள் 'அடுத்து எப்போ சார் வரப்போறீங்கன்னு' அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கக்கூடிய நேரத்தில் மூன்று ரூமையும், ஒரு ஹாலையும் சோதனை செய்வதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios