நாங்க 4 பேரு இல்ல... நூறு பேரு... கெத்து காட்டிய ஹெச்.ராஜா..!
நாங்கள் 4 பேர் மட்டுமே தர்ணா என்று கூறியும் பல நூற்றுக்கணக்கில் தொண்டர்கள் வந்துள்ளனர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நாங்கள் 4 பேர் மட்டுமே தர்ணா என்று கூறியும் பல நூற்றுக்கணக்கில் தொண்டர்கள் வந்துள்ளனர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மோடியையும், அமைத் ஷாவையும் சோலியை முடித்து விட வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ஆவேசமடைந்த ஹெச்.ராஜா, ’நெல்லை கண்ணனை கைது செய்தே ஆகவேண்டும்’என ஆளாக குமுறினார். இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். இந்நிலையில், தற்போது, இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீசார் கலந்து செல்ல சொல்லுயும் தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டதால், போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று நாங்கள் 4 பேர் மட்டுமே தர்ணா என்று கூறியும் பல நூற்றுக்கணக்கில் தொண்டர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.'’ என ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.