Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை..!! அடுத்த 48 மணி நேரத்தில் அதிரடி..!!

செப்டம்பர் 19 தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 20ஆம் தேதி  தெற்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

Warning issued for 10 districts in Tamil Nadu.  Action in the next 48 hours.
Author
Chennai, First Published Sep 17, 2020, 2:26 PM IST

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம் சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் செய்யும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசும்ஒட்டிபதிவாக கூடும். 

Warning issued for 10 districts in Tamil Nadu.  Action in the next 48 hours.

வட கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூர்(நீலகிரி) வால்பாறை (கோவை) ஆலந்தூர் (சென்னை) நாமக்கல், சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) ஆகிய இடங்களில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 20 வரை தென் மேற்கு  அரபிக் கடலில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 21 வரை, கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 18 அம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 21 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

Warning issued for 10 districts in Tamil Nadu.  Action in the next 48 hours.

செப்டம்பர் 19 தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 20ஆம் தேதி  தெற்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 21 தெற்கு மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 18-9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் அலை 2.7 மீட்டர் முதல் 3.6 மீட்டர் வரை எழும்பக்கூடும், எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios