virugampakkam biriyani shop stalen meet owner and employees
கடந்த 28 ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணிக்கடை மீது திமுகவினர் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கடைக்கு நேரில் சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடை உரிமையாளர் மற்றும் தாக்குதலுக்கு ஆளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் கடையை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போனதால் கடையின் முன்பக்கத்தில் உள்ள ஒரு ‘ஷட்டரை’ சாத்தி விட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கடைக்குள் சென்று பிரகாசிடம் சாப்பிட பிரியாணி வேண்டும் என்று கேட்டனர்.


இதையடுத்து பிரியாணி கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் விருகம்பாக்கம் ஆர்.ஆர். பிரியாணிக் கடைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். அந்த கடைக்குச் சென்ற அவர், உரிமையாளர் மற்றும் தாக்குதலுக்கு ஆளான கடை ஊழியர்கள் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அன்று நடந்தது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று உறுதியளித்தார். மேலும் திமுகவினரால் இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் தன்னிடம் புகார் அளிக்குமாறும் ஸ்டாலின் கேட்க கொண்டார்.
