தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை, தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். பொங்கல் திருநாளை உற்றார், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.