Asianet News TamilAsianet News Tamil

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வேலூர் தேர்தல் ! பலத்த போலீஸ் பாதுகாப்பு !!

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

vellore election will be commenced
Author
Vellore, First Published Aug 5, 2019, 6:13 AM IST

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

vellore election will be commenced

ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெறும்.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.

.இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி.பாட் கருவிகளும் அனுப்பப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் நேற்று இரவே வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து தயார் நிலையில் வைத்து உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் பூத் சிலிட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம்.

vellore election will be commenced

வாக்குப்பதிவை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்காக தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநில போலீசாருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றம் காணப்படும் வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படை வீரர்களும் நிறுத்தப்படுவார்கள்.

vellore election will be commenced

மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பாட் கருவிகளும், வாக்கு எண்ணிக்கை மையமான ராணிபேட்டையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்.

9-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். யாருக்கு வெற்றி என்பது அப்போது தெரிந்துவிடும். 

Follow Us:
Download App:
  • android
  • ios