கொரோனாவைக் காரணம் காட்டி எம்.பி.-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர்.

கொரோனாவைக் காரணம் காட்டி எம்.பி.-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர்.

உலகையே புரட்டிப்போட்ட கொரோனா இந்தியாவில் தனது கோரத்தாண்டவத்தை ஆடியது. முதல் அலையில் போடப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சென்றது. போதிய மருத்துவ உட்கட்டமைப்புகள் இல்லாததால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பு நிலைக்குச் சென்றது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த நோயாளிகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனை வளாகங்கள், சாலைகள், வீடுகள் என கொத்துக் கொத்தாக உயிரிழப்புகளும், மயானங்களில் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்ட சடலங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கங்கையில் மிதந்த சடலங்கள் என ஒட்டுமொத்த காட்சிகளும் உலகையே உலுக்கின.

மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்தவே நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அந்தவகையில் எம்.பி.-க்களின் தொகுதி வளர்ச்சிக்கான மேம்பாட்டு நிதியும் நிறுத்தப்பட்டது. ஆண்டுதோறும், குடிநீர், ஆரம்பக்கல்வி, பொதுசுகாதாரம், சுகாதாரம்மற்றும்சாலைகள்போன்றவற்றில்தங்கள்தொகுதிகளில்நீடித்துநிலைக்கும்வளர்ச்சிப்பணிகள்மற்றும்திட்டங்களுக்குபயன்பகும்வகையில் 5 கோடிரூபாய்ஒவ்வொருநாடாளுமன்றஉறுப்பினருக்கும்வழங்கப்படுவதுவழக்கம். கொரோனாசிகிச்சைமற்றும்தடுப்பூசிஉள்ளிட்டசெலவுகளைகருத்தில்கொண்டுஎம்பிக்களுக்கு, வழங்கப்பட்டுவந்தஅந்ததொகுதிமேம்பாட்டுத்தொகைகடந்தஆண்டுஏப்ரல்மாதம்தற்காலிகமாகநிறுத்திவைக்கப்படுவதாகமத்தியநிதியமைச்சகம்அறிவித்தது.

ஆனாலும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டடப் பணிகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தொகுதி வளர்ச்சி நிதியை ரத்து செய்ததற்கு காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இருந்தபோதும், அந்த நிதியை விடுவிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்தநிலையில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்துள்ளதால் வளர்ச்சி திட்டங்களை மீண்டும் செயல்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில்பிரதமர்மோடிதலைமையில்இன்றுமத்தியஅமைச்சரவைக்கூட்டம்நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில்எடுக்கப்பட்டமுடிவுகள்குறித்துமத்தியமந்திரிஅனுராக்தாகூர்செய்தியாளர்களுக்குவிளக்கம்அளித்தார். அப்போது, எம்.பிக்களின்தொகுதிமேம்பாட்டுநிதியைசெலவழிக்கமத்தியஅரசுஅனுமதிவழங்கியதாக அவர் கூறினார். நடப்பாண்டிற்காகமீதமுள்ளமாதங்களில்செலவழிக்கஒரேதவணையாகரூ. 2 கோடிநிதிஒதுக்கப்படும். அடுத்தநிதியாண்டுமுதல்ஒவ்வொருஆண்டும்ரூ. 5 கோடிஇரண்டுதவணைகளாகவிடுவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், நாடுஇப்போதுபொருளாதாரமீட்சிக்கானபாதையில்சென்றுகொண்டிருப்பதால்மீதமுள்ள 2021-22 ஆம்நிதிஆண்டுமுதல்வரும் 2025 - 26 ஆம்நிதிஆண்டுவரைதொகுதிமேம்பாட்டுநிதியைதொடர்ந்துவழங்கஒப்புதல்வழங்கப்பட்டுள்ளது. கடந்தஓராண்டில்இந்தியாமுழுவதும்உள்ள 216 மாவட்டங்களில்நடத்தப்பட்டமதிப்பீடுஅடிப்படையில்நிதியைதொடர்ந்துவழங்கமத்தியஅமைச்சரவைமுடிவுசெய்துள்ளது. மீதமுள்ள 2021- 22 ஆம்நிதியாண்டுமுதல் 2025-26 ஆம்நிதிஆண்டுமுதல்வரை17,417 கோடிரூபாய்தொகுதிமேம்பாட்டுநிதிக்காகமதிப்பீடுசெய்யப்பட்டுள்ளது. தொகுதிமேம்பாட்டுக்கான 5 கோடிரூபாய்இரண்டுதவணைகளாகபிரித்துவழங்கப்படும்என்றும் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.