Asianet News TamilAsianet News Tamil

TN Local Body Elections 2022 : அதிமுக பணம் கொடுத்தாலும்.. நாங்க தான் ஜெயிப்போம்.. அமைச்சர் மூர்த்தி !

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tn urban local body elections dmk minister moorthy at the poll booth in madurai
Author
Tamilnadu, First Published Feb 19, 2022, 12:25 PM IST

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. 

Tn urban local body elections dmk minister moorthy at the poll booth in madurai

மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

Tn urban local body elections dmk minister moorthy at the poll booth in madurai

இதில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். தற்போது மதுரை ஐயர் பங்களா சேவியர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மூர்த்தி வாக்களித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவினர் வாக்களிக்க பரிசுப் பொருட்கள், பணம் கொடுத்தாலும் முதலமைச்சர் மக்களுக்கு வழங்கிய திட்டங்களால் அனைத்து நகராட்சி,பேரூராட்சிகளில் திமுக அமோக வெற்றி பெறும்’ என்று பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios