thoothukudi collector SP press meet

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நட்ந்த மக்கள் போராட்டட்த்தில் காவல்துறை சுட்டதில் 13 பேர் இறந்துள்ளன்ர். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப கொண்டுவர மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் எஸ்.பி. முரளி ரம்பாவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் தூத்துக்குடியில் அத்தியாவச பொருட்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் மினிபஸ் அசோசியசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் அதன்படி இன்று மாலைக்குள் மினிபஸும் செயல்படும் என்று கூறினார். அரசுப்பேருந்து அனைத்தும் இயக்கப்படும் எனக் கூறிய ஆட்சியர். ஆலை இயங்க விடமாட்டோம் என உறுதி தெரிவித்தார்.

அனைத்து ஏடிஎம் மற்றும் பெட்ரோல் பங்குகள் திறக்க வங்கி அதிகாரிகள் பெட்ரோல்பங்க் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் எனக்கூறினார். இணைய சேவை வழங்க தமிழக அரசு முடிவு செய்யும் என தெரிவித்தார். 

பின் எஸ்.பி முரளி ரம்பா முதல்நாள் போட்ட அதே எண்ணிக்கையுள்ள காவலர்கள்தான் இன்றும் இருக்கிறார்கள் என்று கூறியவர். 145 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.