முறைகேடே நடக்கவில்லையா..? 2012ன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறந்துடாதீங்க காங்கிரஸ்காரங்களே... சொல்கிறார் ராஜீவ் சந்திரசேகர்!
2 ஜி அலைவரிசை முறைகேட்டு வழக்கில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் போது, இந்த வழக்கை கடும் சிரமங்களுக்கு இடையே வெகுநாட்களாகப் பின் தொடர்ந்தனர் சிலர். அந்த வெகு சிலரில், சுயேச்சை எம்.பி.,யான ராஜீவ் சந்திரசேகர், பத்திரிகையாளர்கள் ஷாலினி சிங், ஜே. கோபிகிருஷ்ணன், சுனில் ஜெயின் உள்ளிட்டோர் இருந்தனர்.
இன்று, கீழமை நீதிமன்றமான சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிபிஐ தான் தாக்கல் செய்த வழக்கை, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து, தங்கள் டிவிட்டர் பதிவுகளில், வெளிப்படையாகவே பலத்த அதிர்ச்சிகளை வெளியிட்டு வருகின்றனர் மேற்சொன்ன நபர்கள் மற்றும் பலர்.
ஆனால் இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு திசைதிருப்பி முற்றிலும் மாற்றிப் போட காங்கிரஸ் எவ்வாறு முயல்கிறது என்பதைக் குறித்தும் அவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
I wrote this in 2010 aftr #KapilSibal unveiled his famous clumsy “Zero loss” coverup attempt - that #2GScam must be investigated as a serious white collar crime ! @thesuniljain @shaliniscribe pic.twitter.com/f4BLmmBpWV
— Rajeev Chandrasekhar (@rajeev_mp) December 21, 2017
இன்று வெளியான தீர்ப்பு சமூக வலைதளங்களில் பரவலான பின்னர், தனது டிவிட்டர் பதிவில் மீண்டும் ஒரு கருத்தைப் பதிவு செய்தார் ராஜீவ் சந்திரசேகர்.
இந்தத் தீர்ப்புக்காக யாரும் ஏமாறத் தேவையில்லை. ஏன் என்று விளக்குகிறேன் என்று குறிப்பிட்டு, இன்று வெளியிடப்பட்ட ஒரு தீர்ப்பானது அரசு தொடர்பான 4 நபர்களின் மீதான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள்தான்! ஆனால், கடந்த 2012ல் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பைப் பார்க்க வேண்டும். விசாரணை நீதிமன்றம் அரசுத் தரப்பினால் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறியபோது, தன்னைக் குறை கூறிக் கொண்டிருக்கும் இந்த முறைகேட்டில் இருந்து விசாரணை நீதிமன்றமும் முரண்படாமல் இருந்தது. அது பிப்.2012ல் உச்ச நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பில் வெளிப்பட்டது. அப்போது, 2ஜி முறைகேட்டில் சிக்கிய தகுதியற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்து, மீண்டும் ஏல முறையில் உரிமம் வழங்க உத்தரவிட்டது.
எனவே, இந்தக் கீழமை நீதிமன்றத் தீர்ப்பை குறிப்பிட்டு, முறைகேடே நடக்கவில்லை என்று குறிப்பிடும் காங்கிரஸ், 2012ம் வருட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறந்துவிட வேண்டாம், அதை நினைவூட்டுகிறேன் என்று குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.