Asianet News TamilAsianet News Tamil

கார்த்தி சிதம்பரம் சிக்கியதற்கு காரணம் இதுதான்...! வெளியானது தகவல்...!!

This is the reason why Karthi Chidambaram is trapped
This is the reason why Karthi Chidambaram is trapped
Author
First Published Feb 28, 2018, 1:34 PM IST


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்க டிசம்பர் 2-ஆம் தேதி பிரிட்டன் செல்ல வேண்டுமென்று கார்த்தி அனுமதி கோரினார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தியது. 

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா, அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

கார்த்தி சிதம்பரம், வழக்கு விசாரணையில் ஆஜராகாததால், கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது.  

இதனை தொடர்ந்து இதை ரத்து செய்யக்கோரி, கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதுனையடுத்து வெளிநாடு செல்ல தனக்கு அனுமதி அளிக்கும்படி கார்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வரும் 28-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அனுமதி வழங்கியது. 

மேலும், வெளிநாட்டில் கார்த்தி சிதம்பரம் தங்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை சி.பி.ஐ.க்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். 

அதன்படி வெளிநாடு சென்று விட்டு இந்தியா திரும்பினார். அவர் இந்தியா வந்ததும் சிபிஐ அதிகாரிகள் உடனே அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். 

சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்து சென்றது சிபிஐ. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் தலையிட்டதால் ரூ.305 கோடி பெற அனுமதி கிடைத்ததாகவும் அந்நிய முதலீடு பெற உதவியதால் கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ.10 லட்சம் தந்ததாகவும் இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதை ஆதாரமாக வைத்தே சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios