சிதம்பரம் தொகுதியில்  தனி சின்னத்தில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் நிலையில், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி புதிய காரணத்தைக் கூறியுள்ளார்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திண்டிவனத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். அப்போது விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பேசினார்.


“திமுக தலைமையிலான கூட்டணி பரிசுத்தமான கூட்டணியாக அமைந்துள்ளது. நம்மை எதிர்க்கும் கூட்டணி சீட்டும் நோட்டும் பேரம் பேசி உருவாக்கப்பட்டது. பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது. விழுப்புரத்தில் போட்டியிடும் வேட்பாளர் நாடறிந்த எழுத்தாளர். அவர் இங்கே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் ஏன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்ற கேள்வி எழலாம்.