Asianet News TamilAsianet News Tamil

இதைவிட கேவலம் எதுவும் இல்லை... பாஜகவுக்கெதிராக ஓ.பி.எஸ்- இ.பி.எஸை தூண்டிவிடும் திருமாவளவன்..!

அரசியலுக்காக சாதிவெறி மதவெறி கொண்டவர்களை அனுமதித்தால் அது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இழைக்கும் துரோகம் என முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

There is nothing more disgusting than this ... Thirumavalavan who incites OPS-EPS against BJP
Author
Tamil Nadu, First Published Oct 30, 2020, 1:05 PM IST

பாஜக சார்பில் வரும் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த உள்ளதை எதிர்த்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’வேல் யாத்திரை மூலம் சாதி மத வெறியை தூண்டி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வும் இந்துத்துவ சக்திகளும் முயற்சி செய்கின்றன.

There is nothing more disgusting than this ... Thirumavalavan who incites OPS-EPS against BJP

நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, சூர்யா, வைரமுத்து  உள்ளிட்டவர்கள் இந்து மதத்தை புண்படுத்திவிட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் பா.ஜ.க. வினர். நீதிமன்றத்தை கொச்சைப்படுத்திய எச்.ராஜா, பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் மீது பலதரப்புகளில் இருந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை பா.ஜ. க வினர் இணைய வழியில் புகார் அளித்தவுடன் வழக்கு பதிவு செய்கிறது.

மனுதர்மத்தை பெரியார் எதற்காக எதிர்த்தார் என்பது குறித்து இணைய வழி கருத்தரங்கில் 40 நிமிடங்கள் தான் பேசிய காணொளியை தவறாக பரப்புகிறார்கள். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களில் எப்படி ஆட்சியை கைப்பற்றினார்களோ அதேபோல தமிழகத்தில் இந்த உத்தியை கையாளுகிறார்கள். சாதிவெறியை தூண்டும் அசுவத்தாமன், எச்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய தனது பெயரில் புகார் அளித்துள்ளேன்.There is nothing more disgusting than this ... Thirumavalavan who incites OPS-EPS against BJP

சாதி மத வெறியாளர்களுக்கு இடமில்லை என்று அறிவித்த அதிமுகவின் நிறுவனர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை தனது போஸ்டரில் பாஜக பயன்படுத்துவதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை. அதிமுகவும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் இதை வேடிக்கை பார்க்கக்கூடாது. திமுக கூட்டணியில் ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையில் பாஜக வினர் செயல்பட்டு வருகின்றனர்.There is nothing more disgusting than this ... Thirumavalavan who incites OPS-EPS against BJP

அரசியலுக்காக சாதிவெறி மதவெறி கொண்டவர்களை அனுமதித்தால் அது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இழைக்கும் துரோகம் என முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ’7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பாக அரசின் முடிவை வரவேற்கிறேன். அதே நேரம் நீதிபதி கலையரசன் அறிக்கையின் படி 10 விழுக்காடாக அதிகரித்து அரசாணை வெளியிட வேண்டும்’எனவும் வலியுறுத்தினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios