அங்கே மூணு பொண்டாட்டி... இங்கே மூணு இலை... திமுக எம்.பி., செந்தில் கிளப்பிவிட்ட விவாதம்..!
கூட்டணி கட்சியினரை சமமாக நடத்தும் பண்பு உங்களுக்கு கிண்டலாக உள்ளதா சார்?? இலைபோட்டு பரிமாறுவது நம்கலாச்சாரம்...ஆனா மூணுபொண்டாட்டி கட்டுவது..?
திமுக எம்.பி., செந்தில் குமார் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர். சில நேரங்களில் அவரது பதிவுகள் சர்சைக்கு உள்ளாகும். சில பதிவுகள் கிச்சுக்கிச்சு மூட்டும். அந்த வகையில் செந்தில்குமாரின் சமீபத்திய டவிட்டர் பதிவு அதிமுக-திமுக இடையே விவாதத்தை கிளப்பி இக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகிய மூவரும் அமர்ந்து உணவருந்தும் புகைப்படத்தை பதிவிட்டு இரட்டை இலை இல்லை. மூன்று இலை என கேலி செய்துள்ளார். இது பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
‘’கூட்டணி கட்சியினரை சமமாக நடத்தும் பண்பு உங்களுக்கு கிண்டலாக உள்ளதா சார்?? இலைபோட்டு பரிமாறுவது நம்கலாச்சாரம்...ஆனா மூணுபொண்டாட்டி கட்டுவது..?
உங்களுக்கே ஆயிரத்தெட்டு பிரச்சனை இந்த விமர்சனம் தேவையா அங்க இருந்து தான நேத்து ஒரு இலையை உருவிட்டு உங்க தலைவர் வீர வசனம் பேசுனார் மறந்துட்டிங்களா? அதுவும் இனி தர்மரி திமுகவுக்கு வீக் இல்லையாம் அப்ப இவ்ளோ நாளாக என்ன அர்த்தம் புரிஞ்சுச்சா சார்???
என் கணக்கீட்டின்படி அதிமுக அழிந்துவிட்டது ..அதை BJP சாதகமாக்கிகொண்டு எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது...இனி அதிமுக வாங்கும் வாக்கு எல்லாமே படிப்பறிவு இல்லாதவர்கள் போடுவதே ..பணம் வாங்கி கொண்டு போடுபவர்களே...