The World Investor Conference will be held in 2018
2018 ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் எனவும், முதலீட்டுக்கு உகந்த சூழலில் எப்போது தமிழகம் திகழ்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
9 நாடுகள், 23 பங்குதாரர் நிறுவனங்கள் இணைந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. இம்மாநாடு மூலம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதைவிட இரு மடங்காக ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவுக்கு முதலீடு கிடைத்தது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழக அரசு அறிவித்தபடி இந்த ஆண்டு முதலீட்டாளர் மாநாடு நடைபெற வேண்டும். ஆனால் இதுவரை நடைபெறவில்லை.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 3 ஆவது தென்மண்டல மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2018 ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் எனவும், முதலீட்டுக்கு உகந்த சூழலில் எப்போது தமிழகம் திகழ்வதாகவும் தெரிவித்தார்.
