Asianet News TamilAsianet News Tamil

பிளைட் ஏறும்போது மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்த பெண்.. சென்னை விமான நிலையத்தில் கத்திக் கதறிய கணவர்.

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளா வந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

The woman who fell unconscious and died while boarding the flight .. The husband who screamed at the Chennai airport.
Author
Chennai, First Published Sep 22, 2021, 11:26 AM IST

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளா வந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தமானைச் சேர்ந்தவர் பாத்திமா (60) அவருக்கு சில காலமாக உடல்நிலை சரியில்லை அதற்காக அந்தமானில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அதில் அவருக்கும் பலனில்லை, இதனால் கேரளாவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற விரும்பினார். 

The woman who fell unconscious and died while boarding the flight .. The husband who screamed at the Chennai airport.

இதனால் அவருடைய கணவர் பீர்முகமது(64) பாத்திமாவும் நேற்று மாலையில் இண்டிகோ விமானத்தில் அந்தமானில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தனர். ன்னர் சிறிது நேரம் அங்கேயே ஓய்வெடுத்து விட்டு சென்னையிலிருந்து மாலை  6.10 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கேரளா புறப்பட முடிவு செய்தனர். அதன்படி அந்தமானில் இருந்து வந்த அவர்கள், தங்கள் உடமைகள் எடுத்துக்கொண்டு கோவை விமானத்தில் ஏற தயாராகினர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாத்திமா விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். மனைவி தீடிரென சரிந்ததை கண்டு பதறி அவரது கணவர் பீர் முகமது கத்தி கூச்சலிட்டார்.

The woman who fell unconscious and died while boarding the flight .. The husband who screamed at the Chennai airport.

இதையடுத்து சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பாத்திமாவுக்கு பரிசோதனை செய்தனர், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மனைவி விமான நிலையத்தில் உயிரிழந்த நிலையில் அவரது கணவர் கதறி அழுதார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தியதுடன் சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios