Asianet News TamilAsianet News Tamil

காவல்துறைக்குள்ளும் நுழைந்த ஆர்.எஸ்.எஸ்... நாங்களும் ஆயுதம் எடுப்போம்... ஆவேசப்படும் வன்னியரசு..!

எங்களது உணர்வுகள், உரிமைகள் பறி போய் கொண்டிருந்தால் உங்கள் கையில் மட்டும் தான் ஆயுதம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். எங்களுடைய கைகளிலும் ஆயுதம் வரும்.

The RSS that entered the police force ... we too will take up arms ... the angry Vanniyarasu
Author
Tamil Nadu, First Published Jan 10, 2022, 12:23 PM IST

ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும், காவல்துறை அதிகாரிகள் விசிகவினரை கட்சி கொடி ஏற்றக்கூடாது, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றெல்லாம் தடை விதிப்பதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறைக்குள் ஆர்.எஸ்.எஸ் புகுந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு. The RSS that entered the police force ... we too will take up arms ... the angry Vanniyarasu

இது குறித்து அவர், ‘’இஸ்லாமியர்களுக்கு எதிரி இந்த அரசியலமைப்புச் சட்டம் தான். மதச்சார்பின்மை என்கின்ற அந்தக் கருத்து தான் அவர்களுக்கு எதிராக இருக்கிறது. இந்தியாவுடைய பன்முகத்தன்மை தான் அவர்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த நிலைமையை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறார்கள்.

இவர்கள் படைக்க இருக்கிற பார்ப்பன தேசத்திற்கு அல்லது இந்து தேசத்திற்கு, ராமராஜ்யத்திற்கு எதிராக எங்கெல்லாம், எதுவெல்லாம் தடையாக இருக்கிறது என்று பார்க்கிறார்கள். குறிப்பாக அவர்கள் அவர்களுக்கு தடையாக இருப்பது தேசிய இனங்களின் விடுதலை அல்லது தேசிய இனங்களிடையே உரிமை. தேசிய இனங்களின் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்ய வேண்டிய வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:- கொரோனா பயத்தில் ஒரு குடும்பமே விஷமருந்தி விபரீதம்... மதுரையில் நடந்த படுபயங்கரம்..!

 அதற்கு தமிழ் தேசியம் பேசுபவர்களையும் அவர்கள் கை வைத்துக் கொள்வார்கள். போலித் தமிழ் தேசியவாதிகள் இங்கே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக வாய்மூடி கிடந்தவர்கள், இன்றைக்கு இஸ்லாமிய விடுதலை குறித்து வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அந்த அபாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசுக்கு பின்னாலிருந்து பாஜகவுக்கு பின்னாலிருந்து இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கும் தமிழ் தேசியவாதிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.The RSS that entered the police force ... we too will take up arms ... the angry Vanniyarasu

வெறுமனே ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மட்டுமே செய்து கொண்டிருக்கிற காரியமல்ல. இந்திய ஒன்றியம் முழுக்க இந்த மாதிரி வேலைகளை செய்யக்கூடிய கைக்கூலிகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டிலும் அவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக சந்நியாசிகளுக்கு எதிராக போலி சாமியார்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம். 

தமிழ்நாடு அரசுக்கு எதிராக அல்ல. பிறகு எதற்கு காவல்துறை வந்து வழி மறைக்கிறது? என்ன பாசம் இருக்கிறது காவல்துறைக்கு... ஆகவே தான் சொல்கிறோம் காவல்துறைக்குள்ளும் ஆர்எஸ்எஸ் ஊடுருவி இருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொன்னார்கள் சிறுபான்மை மக்களின் உரிமை, உடமை நசுக்கப்படும் என்றால் இந்தியாவிற்குள் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று சொன்னார்கள். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மோடி அவர்களே, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே, புரட்சித் தலைவர் அம்பேத்கர் அவர்களின் கருத்தை மீண்டும் நாங்கள் இங்கே அழுத்தமாகச் சொல்கிறோம்.

 

எங்களது உணர்வுகள், உரிமைகள் பறி போய் கொண்டிருந்தால் உங்கள் கையில் மட்டும் தான் ஆயுதம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். எங்களுடைய கைகளிலும் ஆயுதம் வரும். இந்திய தேசத்தை காப்பதற்கு இந்தியாவுடைய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்துவோம் என்பதை அடிப்படை செய்தியாக சொல்லிக் கொள்கிறேன்’’ என அவர் எச்சரித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios