Asianet News TamilAsianet News Tamil

10 வருடத்திற்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு ஜாதகம் மிகவும் கெட்டியாக உள்ளது. அமைச்சர் வெளியிட்ட ரகசியம்.

அப்போது அமைச்சர் R.B.உதயகுமார்  பேசியதாவது, நான் உங்களிடம் ஒரே ஒரு ரகசியம் கூறுகிறேன் பத்து வருடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராவதற்கு ஜாதகம் மிகவும் கெட்டியாக உள்ளதாக கூறினார்.  

The horoscope is too tight for Edappadi Palanisamy to come first for 10 years. The secret revealed by the Minister.
Author
Chennai, First Published Mar 19, 2021, 11:14 AM IST

10 ஆண்டுகளில் 3 துறைக்கு அமைச்சராக பணியாற்றி உள்ளேன் நீங்கள் எந்த இடத்திலாவது உதயகுமாரினால். நான் கெட்டுப் போய் விட்டேன் என்று எவரேனும் சொல்வாரானால் அந்த இடத்திலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் உணர்ச்சி பொங்க தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயகுமார் பேசியுள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. வருகின்ற 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதனைதொடர்ந்து, மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி நகர் பகுதியில், திருமங்கலம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் R.B.உதயகுமார் திறந்த வெளி பிரச்சார வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

The horoscope is too tight for Edappadi Palanisamy to come first for 10 years. The secret revealed by the Minister.

அப்போது அமைச்சர் R.B.உதயகுமார்  பேசியதாவது, நான் உங்களிடம் ஒரே ஒரு ரகசியம் கூறுகிறேன் பத்து வருடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராவதற்கு ஜாதகம் மிகவும் கெட்டியாக உள்ளதாக கூறினார். ஜாதகம் என்பது ஜோசியரை வைத்து பார்க்கவில்லை எனவும் மக்களை நம்பியே கூறுகிறோம் எனவும் கூறினார். அந்த ஜாதகத்தில் ஸ்டாலினுக்கு வாய்ப்பே இல்லை என்பதையும், கமல் கட்டத்திற்க்குள்ளையே வரவில்லை என்பதையும் அந்த ஜாதகம் சரியாக இருக்கிறது என்றால், மக்களை மட்டும் நம்பி களத்தில் நிற்கிற காரணத்தினால்தான் எங்களின் பக்கம் மக்கள் மக்களின் பக்கம் நாங்கள், ஆதலால் தான் முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் வெள்ளமென திரண்டுள்ளனர். அம்மா அவர்கள் அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார்கள். 

The horoscope is too tight for Edappadi Palanisamy to come first for 10 years. The secret revealed by the Minister.

பத்தாண்டுகளில் 3 துறைக்கு அமைச்சராக பணியாற்றி உள்ளேன், நீங்கள் எந்த இடத்திலாவது உதயகுமாரினால் கெட்டுப் போய் விட்டேன் என்று எவரேனும் சொல்வாரானால் நான் அந்த இடத்தில் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்பதை நான் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது உள்நோக்கத்தோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, எங்களோடு மக்கள் பணியில் போட்டி போட முடியாதவர்கள் அவதூறு பழி சுமத்துகிறார்கள். எங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள், நாங்கள் காந்திய வழியில் சென்று கொண்டிருக்கிறோம். எத்தனை சோதனை வந்தாலும், தடைகள் வந்தாலும் சத்தியத்தின் வழியில் இந்தத் தேர்தலை வெற்றிகரமாக, அமைதிகரமாக தேர்தல் ஆணையம் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் வழங்குவோம். இந்தத் தேர்தலில் உங்களின் தீர்ப்பு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என தலைவணங்கி ஏற்போம் என வாக்கு சேகரித்து பேசினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios