கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...
கோயம்பேட்டில் அங்காடி கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேட்டில் அங்காடி நிலம் கட்ட நில உரிமையாளர்களிடம் இருந்து தமிழக அரசு கையகப்படுத்தப்பட்டது.
நிலம் பயன்படுத்தப்படாததால் உரிமையாளரிடம் நிலத்தை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நில உரிமையாளர்கள் 12 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வீட்டு வசதித்துறை செயலாளர், சிஎம்டிஏ -வின் உறுப்பினர் செயலரும் நாளை ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.