வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பிஜேபி மாநில துணை செயலாளர் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 30 வழக்கு நிலுவையில் உள்ளது.

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பிஜேபி மாநில துணை செயலாளர் அகோரம் கைது. இவன் மீது கொலை வழக்குகள் உட்பட 30 வழக்கு நிலுவையில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பிஜேபி மாநில துணை செயலாளர் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 30 வழக்கு நிலுவையில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பாஜக மாநில துணைத்தலைவர் அகோரம் சீர்காழியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:- இரு சக்கர வாகன எண்ணில் ஆபாசம்... கூச்சப்படும் இளம்பெண்... சங்கடமான தந்தை..!

அவரது கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சரை விமர்சனம் செய்து பேசியமைக்காக பாஜக மாநில துணைத் தலைவர் (ஓபிசி அணி) அண்ணன் அகோரம் அவர்களை கைது செய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் கருத்து சுதந்திரத்தை குரல்வளை கொண்டு நெறிக்கிறது விடியல் அரசு’’ என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.