234 தொகுதியும் அதிமுகவின் கோட்டைதான். என்னை எதிர்த்து யார் நின்றாலும் மரண அடி. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.
ராயபுரத்தில், தலைமை கழகத்தில் கட்டளையுடன் 7வது முறையாக போட்டியிட உள்ளேன். 5 முறை வெற்றி பெற்றுள்ளேன். எனவே திமுக, காங்கிரஸ் யார் போட்டியிட்டாலும் 6வது முறையாக மீண்டும் வெற்றி பெறுவேன்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்படுகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும், மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாதகமில்லாத வகையில் தான் அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது என்றார்.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். 234 தொகுதியும் புரட்சி தலைவர், புரட்சி தலைவி கோட்டை தான். உரிய நேரத்தில், வேட்பு மனு தாக்குதலுக்கு முன்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக -பாஜக- தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கூட்டணிகளுக்கிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என விளக்கம் அளித்தார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்கள் அந்த பணிகளை செய்து வருகிறது. எனவே அது தயாரித்த பின் உரிய நேரத்தில், விரைவில் அது வெளியிடப்படும். ராயபுரத்தில், தலைமை கழகத்தில் கட்டளையுடன் 7வது முறையாக போட்டியிட உள்ளேன். 5 முறை வெற்றி பெற்றுள்ளேன். எனவே திமுக, காங்கிரஸ் யார் போட்டியிட்டாலும் 6வது முறையாக மீண்டும் வெற்றி பெறுவேன் எனக் கூறினார்.