ஒட்டு மொத்தமாக நிதியை வைத்துக் கொண்டு மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு தட்டிப் பறிப்பதாக துணை சபாநாயகர் தம்பிதுரை  மோடி அரசை திட்டித் தீர்த்தார். புதிய திட்டங்களுக்கு விளம்பரம் மட்டும் செய்யும் மோடி அரசு அதற்கான நிதியை ஒதுக்குவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மத்தியில் ஆளும் மோடி அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே நிறைவேற்றித் தருவதுதான் எடப்பாடி அரசின் வேலை என்று தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல திட்டங்கள் அவரது மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி இலகுவாக நிறைவேற்றப்பட்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி அரசில் உள்ள அமைச்சர்கள் எந்தவித விமர்சனங்களும் செய்வதில்லை. அந்த அளவுக்கு மோடிக்கு பயந்து கொண்டிருப்தாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மட்டும் அவ்வப்பொழுது மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

இந்நிலையயில் கரூர் அருகே செய்தியாளர்களிடையே பேசிய தம்பிதுரை, ஒட்டு மொத்த நிதியையும் வைத்துக்கொண்டுமாநிலஅரசின் அதிகாரங்களைமத்தியஅரசுபறிக்கிறது எனகுற்றம்சாட்டினார்.

மத்தியஅரசுமாநிலஅரசைநகராட்சியாகமாற்றிவிட்டது என்றும், காங்கிரஸ்மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மாநிலஅரசின்அதிகாரங்களைபறித்துகொண்டன என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

மோடிநல்லவர்தான் ஆனால்மாநிலஅரசின்நிதியைமட்டும் அவர் கொடுப்பதுஇல்லை. என்றும் விளம்பரத்துக்காகமட்டுமேமத்தியஅரசுதிட்டங்களைஅறிவிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தற்போது பாராளுமன்றஉறுப்பினராகஇருப்பது தனக்கு மிகுந்த வேதனையாகஉள்ளதுஎன்றும் தம்பிதுரை கடுமையாக பேசினார்.