மத்திய அரசு கொண்டு வந்துள்ள உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம் அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர உச்சநீதிமன்றத்தில் தோற்றுப் போகும் என்றும், பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட்டிருந்தால் இட ஒதுக்கீடு என பிரச்சனையே வந்திருக்காது என அதிமுக எம்.பி.யும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை ஆவேசமாக தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும்சட்ட மசோதா மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசிய தம்பிதுரை பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்பது ஏற்க முடியாது என தெரிவித்தார்.
பொருளாதாரத்தில்பின்தங்கியவர்கள்முன்னேற்றமடையபலதிட்டங்கள்இருக்கும்போதுஇடஒதுக்கீடுஏன்? படித்திருந்தும்அவமதிக்கப்பட்டதால்தான்அம்பேத்கர்தலித்களுக்குதனிஇடஒதுக்கீடுகோரினார். சமூகத்தில்பொருளாதாரத்தைவைத்துஇடஒதுக்கீடுவழங்குவதுமுறையானதுஅல்ல.பொருளாதாரத்தில்பின்தங்கியவர்களுக்குஇதுவரைமத்தியஅரசுஎன்னசெய்திருக்கிறது. மத்தியஅரசின்திட்டங்கள்பலனளிக்கவில்லைஎன்றால்தான்இடஒதுக்கீடுகொண்டுவரவேண்டும்.

நாட்டில்சாதியம்எப்போதுஒழிகிறதோஅப்போதுதான்அனைவருக்குமானநீதிநிலைநாட்டப்படும். தமிழகத்தில்பெரும்பாலும்பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்வசிக்கிறார்கள்என ஆவேசமாக பேசினார்.
பிரதமர்அறிவித்தபடிரூ.15லட்சம்வழங்கினால்அவர்களுக்குஏன்இடஒதுக்கீடுதேவைப்படுகிறது...? முதலில் பிரதமர் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றட்டும் அதன் பிறகு இட ஒதுக்கீடு என்பதே தேவையில்லை என கடுமையாக பேசினார்.

இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு என்பதை நானும் எனது கட்சியான அதிமுகவும் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தம்பிதுரை மோடி மற்றும் பாஜக அரசுக்கு எதிராக பேசியது அங்கிருந்த உறுப்பினார்களை ஆச்சரியப்படுத்தியது. இவரா இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார் என எம்.பி.க்கள் வியப்படைந்தனர்.
