Asianet News TamilAsianet News Tamil

தளபதி ஸ்டாலினின் பக்குவமான வார்த்தைகள்.. சூடு இருக்குதா..? சொரணை இருக்குதா..? மானம் இருக்குதா..? விபரம் கெட்டவனே..!

பி.ஜே.பி. தலைவர் தமிழிசையின் வார்த்தைகள் மூலம் அவர் இன்னமும் அரசியலில் பக்குவம் அடைவில்லை என்பது புலனாகிறது. ராகுல்தான் பிரதமர் என்பதில் கடுகளவும் எங்களிடம் மாற்றமில்லை

thalapathy MK Stalin Words
Author
Tamil Nadu, First Published May 16, 2019, 3:17 PM IST

* பி.ஜே.பி. ஆட்சிக்கு வரும், அப்போது ஐந்து மத்தியமைச்சர் பதவி பெறலாம் என தி.மு.க. தூதுவிட்டுள்ளது. ஆனால் வெளியே நடிக்கிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார். (சபாஷ்ணே. ஸ்டாலினுக்கே தெரியாத தி.மு.க.வின் எக்ஸ்க்ளூசிவ் தகவலை அள்ளிவிடுறீங்களேண்ணே! ஆனா, மோடி முதல் முதலா டிஜிட்டல் கேமெராவுல பாஸ்போர்ட் சைஸ் படம் பிடிச்சது உங்களைத்தான் அப்படிங்கிற பெருமையை மட்டும் ஏம்ணே வெளியில சொல்லாம அடைகாக்குறீங்க?)

* காங்கிரஸ் தோற்றுவிடும் எனும் பயத்தில் மூன்றாவது அணிக்கு  செல்ல ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்: அன்புமணி. (சரி தல,  நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்ச மறு நாள்ள இருந்தே உங்க அப்பா ‘மக்கள் நல திட்டங்களில் சமூக நீதி காக்கப்படணும். அதை மாநில, மத்திய அரசுகள் உறுதி பண்ணனும்’ அப்படின்னு போட்டு எரியுறாரே, அப்ப நீங்க அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியை விட்டு விலக ரெடியாகிட்டீங்கன்னு எடுத்தகலாமா? யாரோட தோல்வியை நினைச்சு இந்த பயம்?)

* கருணாநிதியின் ஆட்சியில் எனக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு கொடுக்கப்பட்டது. இப்போதெல்லாம் தமிழகத்தில் ஏழைகளுக்கும் மரியாதை இல்லை, தியாகிகளுக்கும் மரியாதை இல்லை: நல்லகண்ணு. (அதே கருணாநிதியின் ஆட்சியில், தமிழுக்கு சேவை புரிந்தவங்களை எப்படியெல்லாம் வீட்டு வசதி வாரிய வீட்டுல இருந்து ஓட ஓட விரட்டுனாங்கண்ணு தமிழருவி மணியனை கேளுங்கய்யா உண்மை நறுக்குன்னு புரியும்.)

* பி.ஜே.பி. தலைவர் தமிழிசையின் வார்த்தைகள் மூலம் அவர் இன்னமும் அரசியலில் பக்குவம் அடைவில்லை என்பது புலனாகிறது. ராகுல்தான் பிரதமர் என்பதில் கடுகளவும் எங்களிடம் மாற்றமில்லை. அந்த எண்ணம் அப்படியே தொடர்கிறது: ஆர்.எஸ்.பாரதி (ஆனா அரசியலில் பக்குவமான பேச்செல்லாம் உங்க தலைவர் மாதிரி வருமா பாரதிண்ணே? மானம் இருக்கா, சூடு இருக்கா, சொரணை இருக்குதா, சாடிஸ்டு, விவரம் கெட்டவர், நீயா, உங்க அப்பன் வீட்டு சொத்தா...இப்படியெல்லாம் எவ்வளவு பக்குவமா பேசுவாறு நம்ம தளபதி, இல்ல!)

* மம்தாபானர்ஜியிடம் பேச முயன்றார் பிரதமர் மோடி. ஆனால் ‘உங்களிடம் பேச ஒன்றுமில்லை. புதிய பிரதமரிடம் நான் பேசிக்கொள்கிறேன்.’ அப்படின்னு அவரை மறுத்துவிட்டார் மம்தா: கே.எஸ்.அழகிரி. (அதுதான் தலைவரே அரசியல் தெனாவெட்டுங்கிறது. ஆனால், ‘பி.ஜே.பி.யும், காங்கிரஸும் ஒன்றுதான். இருவரையும் ஆள விடக்கூடாது.’ அப்படின்னு மம்தா உங்க கட்சியை கழுவி ஊத்துன பிறகும், நீங்களெல்லாம் அவர் புகழை பாடிட்டு இருப்பதுதான் நம்பிக்கையில்லாத அரசியல்.)

Follow Us:
Download App:
  • android
  • ios