Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

Terrible warning to the people of Tamil Nadu .. especially the people of this district to be very alert for the next 4 days.
Author
Chennai, First Published Oct 16, 2021, 1:21 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Terrible warning to the people of Tamil Nadu .. especially the people of this district to be very alert for the next 4 days.

மேலும், 17.10.2021: கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,   தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 18.10.2021: வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படியுங்கள்:ஜெ நினைவிடத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிடப்போகும் சசிகலா.. உச்சகட்ட பீதியில் ஓபிஎஸ்-இபிஎஸ்.

Terrible warning to the people of Tamil Nadu .. especially the people of this district to be very alert for the next 4 days.

19.10.2021: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.10.2021: தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்: ஆதிதிராவிட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.. ஜெ மறைவோடு முடிந்துவிட்டது. அடித்து சொல்லும் ரவிக்குமார் MP.

Terrible warning to the people of Tamil Nadu .. especially the people of this district to be very alert for the next 4 days.

குறிப்பு :  மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை  ஒட்டிய கேரளா - லடச்சத்தீவு கடலோர பகுதியில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை  ஒட்டிய கேரளா கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள்

16.10.2021, 17.10.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.10.2021: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Terrible warning to the people of Tamil Nadu .. especially the people of this district to be very alert for the next 4 days.

அரபிக்கடல் பகுதிகள்: 16.10.2021, 17.10.2021: தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios