Asianet News TamilAsianet News Tamil

மார்ச் 31 வரை பள்ளிகூடங்களுக்கு லீவு விடுங்க...!! கொரோனா அச்சத்தில் பதறும் ஆசிரியர்கள்...!!

வருமுன் காத்திடும் நோக்கில்  எல்.கே.ஜி  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகள் வரை மார்ச் 31வரை விடுமுறை வழங்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது

tamilnadu government school teachers demand to school education for leave to lkg to 8th standard students to save from corona
Author
Chennai, First Published Mar 11, 2020, 6:29 PM IST

கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு கருதி  மார்ச் - 31 வரை பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது, இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-  சீனா நாட்டில் தொடங்கி இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பில்லையென்றாலும், பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில்  பாதிப்பு பரவலாகி வருகிறது. 

tamilnadu government school teachers demand to school education for leave to lkg to 8th standard students to save from corona

எனவே  தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்  மாணவர்கள் நலன்கருதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பினைத் தவிர்த்து மற்றவகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை ரத்துசெய்து விடுமுறை அளித்து ஆவனச்செய்ய வேண்டுகிறோம்.  மேலும் கர்நாடகாவில் கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது. அதேவேளையில் அவற்றை குழந்தைகள் கடைபிடிப்பதில் பல சிரமங்கள் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. கேரளா புதுச்சேரி மாநிலங்களுக்கு தொடக்க நடுநிலை மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

tamilnadu government school teachers demand to school education for leave to lkg to 8th standard students to save from corona
  

ஆகவே குழந்தைகளின் நலன்கருதியும் தற்போது சளி இருமல் தும்மல் போன்றவை அதிகரித்துவருவதால்  வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கத்தோடு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருமுன் காத்திடும் நோக்கில் 
எல்.கே.ஜி  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகள் வரை மார்ச் 31வரை விடுமுறை வழங்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios