Asianet News TamilAsianet News Tamil

தேர்வு என்று அறிவித்தால் போதுமா... அதற்கான திட்டம் என்ன..?? கேள்வி கேட்டு துளைக்கும் சிபிஎம்..!!

இவர்களுக்கு முதலில்  தேர்வு எழுதும்  மன நிலையை உருவாக்கிட வேண்டும் ,  இம்மாத இறுதியிலும் ஜூன் மாதம் துவக்கத்திலும் கொரோனா நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கும் என பல பரவலான கருத்துக்கள்  நிலவுகிறது ,

tamilnadu cpm asking government regarding 10th standard exam
Author
Chennai, First Published May 13, 2020, 1:05 PM IST

பள்ளிகளை திறந்து இரு வாரத்திற்கு பின்னரே பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது .  இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ,  தமிழக அரசு ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது .  இந்த காலம் முழுவதும் தொடர்ந்து முற்றிலும் வேறான உளவியல் மற்றும் குடும்பச் சூழலில் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள் .  இத்தகைய சூழல் வெவ்வேறுவிதமான மாணவர்களுக்கு வெவ்வேறு  விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது . 

tamilnadu cpm asking government regarding 10th standard exam 

இவர்களுக்கு முதலில்  தேர்வு எழுதும்  மன நிலையை உருவாக்கிட வேண்டும் ,  இம்மாத இறுதியிலும் ஜூன் மாதம் துவக்கத்திலும் கொரோனா நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கும் என பல பரவலான கருத்துக்கள்  நிலவுகிறது ,  இந்நிலையில் மாணவர்களை தனிமனித இடைவெளியுடன் தேர்வு எழுத வைக்க என்ன ஏற்பாடுகள் அரசிடம் உள்ளது ,  என்பதை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான போக்குவரத்து ஏற்பாடுகள் என்ன என்பதும் தெரியாத சூழ்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி தேர்வுகள் என்ற அறிவிப்பு பொருத்தமானதாக இருக்காது .   இதை கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு அதன் பிறகு பொதுத்தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும் . 

tamilnadu cpm asking government regarding 10th standard exam

பாடம் நடத்துவது என்ற நோக்கில் இல்லாமல் கல்வி பயில்வதற்கான மனநிலைக்கு மாணவர்களை கொண்டு வந்து தேர்வு எழுத வைப்பது என்ற நோக்கில் தமிழக அரசு இதை அணுக வேண்டும் ,  தற்போதைய பணியமர்த்தல் முறையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அனைத்து உயர் கல்வி பணியமர்த்தல் மற்றும் பணி உயர்வுக்கு அடிப்படைக் கூறாக கணக்கில் கொள்ளப்படுகிறது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் .  எனவே அதற்கு உகந்த முறையில் பள்ளிகள் இயங்குவது அதன் பிறகு தேர்வுகள் நடத்துவது என்கிற முறையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு திட்டமிட்டு நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது . 

 

Follow Us:
Download App:
  • android
  • ios