பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்றும் முடிந்தால் அரசியலில் இறங்கி பாஜகவை அஜித்தால் ஜெயிச்சுக் காட்ட முடியுமா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவால் விட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழிசை முன்பு பாஜகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து பேசிய தமிழிசை, அஜித்குமார் மிகவும் நல்லவர், நேர்மையானவர் என்றெல்லாம் புகழ்ந்து அவரையும் பாஜகவைச் சேர்ந்தவர் போல் சித்தரித்து பேசினார்.

இதனால் கடுப்பான நடிகர் அஜித்குமார் திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான்சினிமாவில்தொழில்முறையாகவந்தவன்எனவும், அரசியல்செய்யவோ, மற்றவர்களுடன்மோதவோவரவில்லைஎனதெரிவித்துள்ளார்.

அரசியலில்தனக்குதனிப்பட்டவிருப்பு, வெறுப்புஉண்டுஎனவும், அதனையார்மீதும்திணிப்பதுஇல்லை, மற்றவர்கள்கருத்தைதன்மேல்திணிக்கவிட்டதும்இல்லைஎனவும்குறிப்பிட்டுள்ளார்.
தன்பெயரோ, புகைப்படமோஎந்தவொருஅரசியல்நிகழ்விலும்இடம்பெறுவதைசற்றும்விரும்பவில்லைஎனவும், தங்கள்கடமையைமுறையாகசெய்வதுடன், சட்டம்ஒழுங்கைமதித்துநடக்கவேண்டும்எனவும் அஜித் தமிழிசைக்கு பதிலடிகொடுத்துள்ளார்.

அஜித்தின் இந்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்றும் முடிந்தால் அரசியலில் இறங்கி பாஜகவை அஜித்தால் ஜெயிச்சுக் காட்ட முடியுமா ? என சவால் விட்டுள்ளார்.
