பிரமாண்டம்! முதல்வருக்கு மாபெரும் மணல் சிற்பம்
எடப்பாடி 2021 என்ற கோஷத்தை முன்வைத்து இந்த மணல் சிற்பம் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி 2021 என்ற கோஷத்தை முன்வைத்து இந்த மணல் சிற்பம் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 160 அடி உயர மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10 நாட்களில் 50 மணல் சிற்ப கலைஞர்களால் 50 டன் மணலை கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
இந்த மணல் சிற்பம் ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட உள்ளது.